இறங்கு வரிசையில் எண்ணுதல் COUNTDOWN 64-0209 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், பிப்ரவரி 9, 1964 கெர்ன் கவுண்டி ஃபேர்கிரவுண்ட்ஸ், பேக்கர்ஸ்ஃபீல்ட், கலிபோர்னியா, அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் இறங்கு வரிசையில் எண்ணுதல் (64-0209) சபையாரே, உங்களுக்கு நன்றி. நாம் ஜெபம் செய்வோம். கர்த்தராகிய இயேசுவே, நீர் எங்களோடு இருக்கும்போதும் அல்லது நாங்கள் உமது பிரசன்னத்தில் இருக்கும்போதும் நாங்கள் எப்போதும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இன்று மதியமும் நீர் எங்களோடு ஒரு மகத்தான விதத்தில் சந்திப்பீர் என்றும், இன்று எங்களுக்காக எதிர்பாராதவைகளை மீண்டும் செய்வீர் என்றும் நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த நாள் நோயாளிகளுக்காக ஜெபிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் இங்கிருந்து செல்லும்போது எங்களில் பலவீனமானவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று நான் ஜெபிக்கிறோம். இந்த மக்களிடத்தில் எனக்குத் தயவு கிடைக்கும்படி செய்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் சொன்ன காரியங்கள், ஆண்டவரே, அது உமது வார்த்தையாக இருப்பதால், மக்களுக்கு உண்மையாகத் தொனிக்கட்டும். இப்பொழுது, இயேசுவின் நாமத்தில், நீர் எங்களைச் சந்திப்பீர் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம். சகோதரர் வின்னர்ஸ் அவர்களுக்கும், இந்தக் கூட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்த, பொறுப் பேற்ற இந்தச் சிறந்த போதகர் குழுவிற்கும், ஒத்துழைத்த அனைத்து ஊழியர்களுக்கும், வந்திருக்கும் ஒவ்வொரு நபருக்கும், ஆவிக்குரிய ரீதியில் நீங்கள் அளித்த பெரும் ஆதரவிற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பேசுவது எளிதாக இருந்தது; மேடையை விட்டு இறங்குவது எனக்குக் கடினமாக இருந்தது; நான் மணிக்கணக்கில் இங்கேயே இருக்க முடியும். மேலும் நீங்கள் செய்த அனைத்திற்கும், மக்களுக்கும், இந்தத் திடலின் நிர்வாகிகளுக்கும் (அல்லது இதை நிர்வகிப் பவர்கள் யாராக இருந்தாலும்), இந்த இடத்தைப் பயன்படுத்த எங்களுக்கு அனுமதி அளித்தமைக்காக நன்றி கூறுகிறோம். ஒவ்வொரு சபையும்: தேவன் உங்கள் அங்கத்தினர்களைப் பெருகப்பண்ணி, உங்களை ஆவியிலே உயர்த்தி, நீங்கள் எதிர்பார்த்திருப்பதற்கும் மேலாக மிகவும் அதிகமாகவும் நிறைவாககவும் செய்வாராக என்று நான் ஜெபிக்கிறேன்; அவர் அதற்கும் மேலாகச் செய்வாராக. இங்கு எங்களுக்கு உதவியதற்காக கிறிஸ்தவ வர்த்தகர்கள் மற்றும் பூரண சுவிசேஷ வர்த்தகர்களின் (Full Gospel Businessmen) சிறந்த ஆதரவிற்கும் நான் நன்றி கூறுகிறேன். சகோதரர் பால் கெயின் (Paul Cain), அவர் இன்று நம்முடன் இங்கே இருந்தார், அவர் உபவாசத்தில் இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இதோ, எனக்குப் பின்னால் அமர்ந்திருக்கிறார். ஆச்சரியம், அவர் மிகவும் இளமையாகி விட்டார். எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. அவர் முன்பு கொஞ்சம் பருமனாக இருந்தார், ஆனால் இப்போது மெலிந்துவிட்டார், என்னால் அவரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. மறுநாள் இரவு 'ரமாடா இன்' (Ramada Inn) விடுதியில் ஒரு தரிசனத்தில் நான் அவரைப் பார்த்தேன்; அவர் ஜெபித்த ஒரு பெண் மணியிடம்... அவள் முன்பே இவரால் ஜெபிக்கப் பட்டவள், சிறிது நேரம் என்னால் அவரை அடையாளம் காண முடியவில்லை. நான் தரிசனத்தைக் கவனித்துக் கொண்டி ருந்தேன். நான் சொன்னேன், "அங்கே ஏதோ ஒரு மனிதர் இருக்கிறார்." அவர் எப்போது... நான்... ஓ, தரிசனம் நெருங்கி வந்தபோது, நான் பார்த்தேன், அப்போது நான் சொன்னேன், "அது பால் கெயின் தான். அவர்தான் உனக்காக ஜெபித்தவர்." அந்தப் பெண் குணமடைந்தாள். ஆகவே, கர்த்தருடைய நன்மைக்காகவும் இரக்கத்துக்காகவும் நாங்கள் அவருக்கு நன்றியுள் ளவர்களாக இருக்கிறோம். நண்பர்களே, நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. நாங்கள் இப்போது இருப்பது போல ஒரு குழுவாக, கடைசியாக ஒருமுறை நாம் சந்திக்கப் போகிறோம் என்பதை அறிவோம். அந்த நேரம் எப்போது என்று நமக்குத் தெரியாது. உங்களோடும், சபையாரோடும் இருக்கும் அன்பான போதகர் என்னை மீண்டும் அழைத்தார்: "இது கர்த்தருக்குச் சித்தமானால்" என்று நீங்கள் சொன்னபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் எப்போதும் அந்த வழியில் செல்லவே விரும்புகிறேன். கர்த்தர் என்னை எங்கு அனுப்பினாலும் செல்ல முடியாத அளவுக்கு என் கூட்டங்களை நான் ஒருபோதும் பெரிதாக வளர விட்டதில்லை. அது எங்கிருந்தாலும்... அங்கே ஐந்து பேர் இருந்தாலும், ஒரு நபர் இருந்தாலும், அவர் என்னைப் பிரசங்கிக்க விரும்பினால்... சரி, நான் பம்பாய், இந்தியாவில் ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேருக்குப் பிரசங்கித்துள்ளேன். தென்னாப் பிரிக்காவின் டர்பனில் சுமார் இரண்டு லட்சம் அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்குப் பிரசங்கித்தேன்; ஒரு மதிய வேளையில் முப்பதாயிரம் பேர் கிறிஸ்துவுக்குள் மனந்திரும் பினார்கள், அனைவரும் பூர்வகுடிகள். சமீபத்தில் இருபது பேருக்கு மேல் அமர முடியாத ஒரு சபையில் நான் ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்தினேன். பாருங்கள்? இப்போது, பெரிய ஊழியங்களை வைத்திருக்கும் சகோதரர்களால் அதுபோன்ற இடத்திற்கு வர முடியாது, ஏனென்றால் அவர்களால் அதைச் சமாளிக்க முடியாது. அதைச் செய்வதற்கு அவர்களுக்கு நிறைய பணம் தேவை. தேவன் அவர்களை ஆசீர்வதித்திருக்கிறார். நான் நிச்சயமாக அவர்களைப் பாராட்டுகிறேன், குறிப்பாக, பால் கெயின், ஓரல் ராபர்ட்ஸ் (Oral Roberts) மற்றும் விசுவாசத்தின் சிறந்த போர்வீரர்கள் பலருக்கும் முன்பாக நிற்க நான் சிறியவனாக உணர்கிறேன். அவர்கள் புத்திசாலிகள், படித்தவர்கள், அறிவுஜீவிகள்; கர்த்தருக்காக உழைக்கிறார்கள்; கர்த்தர் அவர்களை ஒரு பணிக்கு அழைத்திருக்கிறார், அவர்கள் தங்கள் பணியைச் செய்து வருகிறார்கள். என்னால் அவர்கள் இடத்தை நிரப்ப முடியாது. அது கர்த்தருக்கும் தெரியும். அவர்கள் செய்வதைப் போல என்னால் காரியங்களைக் கையாள முடியாது. அதனால்தான் அவர் என்னைத் தாழ்மையுடன் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன், என்னை இப்படியே இருக்க விடுகிறார். ஆனால், நான் முன்னணியிலும், முன்பகுதியிலும் சென்று, அஸ்திபாரம் போட முடியும், போதுமானவர்கள் ஒன்றுகூடும்போது, அவர்கள் பெரிய ஊழியர்களைக் காண முடியும் - ஊழியர்கள்... அவர்கள் பெரிய ஊழியர்கள் அல்ல. நான் அப்படிச் சொல்ல வரவில்லை. நமக்குள் பெரியவர் சிறியவர் என்று யாரும் இல்லை. நாம் அனைவரும் சமம் தான், புரிகிறதா. ஆனால் தொலைக்காட்சிகள் மற்றும் ஆதரவுகளைத் தொடர ஒரு நாளைக்குப் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் தேவைப்படும் பொறுப்புகளைக் கொண்ட மனிதர்களால், ஒருவேளை சில இடங்களுக்குச் செல்ல முடியாது. அந்த மனிதர்களுக்காகப் பேச நான் எப்போதும் விரும்புகிறேன், அப்போதுதான் மக்கள் அவர்களுக்கு உதவ முடியும், ஏனென்றால் அவர்களுக்கு உண்மையிலேயே உதவி தேவை. இயேசு கிறிஸ்துவுக்காக நிற்கும் எல்லாவற்றிற்கும் நாங்கள் ஆதரவாக இருக்கி றோம். நாங்கள் அதற்காகவே இருக்கிறோம். நான் முதன்முதலில் குருப்பட்டம் பெற்றபோது, அது டாக்டர் ராய் ஈ. டேவிஸ் (Dr. Roy E. Davis) அவர்களால் மிஷனரி பாப்டிஸ்ட் சபையில் நடந்தது. பின்னர் நான் வெளியேற்றப்படவில்லை, நான் வெளியே வந்தேன், ஏனென்றால் என்னால் சபைகளுக்கு இடையே நடக்க முடிந்தது, அவர் எனக்குக் கொடுத்த ஊழியத்தை எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவின் மீதும் வைக்காமல், ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு, "நாம் சகோதரர்கள். நாம் தொடர்ந்து நடப்போம்," என்று சொல்ல முடிந்தது. ஆகவே, உங்கள் அழைப்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் வெளியே என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள், அவர்கள் ஒரு அன்பின் காணிக்கையை எடுத்தார்களாம். சரி, நான் அதற்குத் தகுதியானவன் அல்ல, நான் அதைக் கேட்கவும் இல்லை. ஆனால் நீங்கள் அதைச் செய்திருப்பதால், செலவுகள் செலுத்தப் பட்டிருந்தால் (செலவுகள் செலுத்தப் படாவி ட்டால், அதை அதில் செலுத்துங்கள்), அவை செலுத்தப் பட்டிருந்தால், நான் என்னால் முடிந்ததைச் செய்வேன். அதைக் கொண்டு நான் என்ன செய்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? வெளிநாட்டு மிஷன்களில் இடுகிறேன்; பின்னர் நானே அங்கு செல்கிறேன், இதன் மூலம் எனக்குத் தெரியும் நீங்கள் ஆதரித்த இந்த ஊழியத்தை: அதைச் செய்ய வசதியற்ற மக்களிடம் நான் எடுத்துச் செல்கிறேன். அப்போது அவர்களுக்கு ஒரு பைசா கூட செலவாகாது. வலது கை எது, இடது கை எது என்று கூடத் தெரியாத மக்கள், தங்களுக்குக் கிடைத்ததை உண்டு வெளியில் கிடக்கிறார்கள், அவர்களில் சிலர் தெருக்களிலும் மற்ற இடங்களிலும் பட்டினியால் சாகிறார்கள். நான் அதை அவர்களிடம் கொண்டு செல்ல முயற்சிக்கிறேன், இங்கே நீங்கள் பார்ப்பது போலவே என்னால் முடிந்தவரை செய்தியைச் சிறப்பாகக் கொண்டு வருகிறேன். தேவன் அதைக் கனப்படுத்துகிறார்; உங்கள் பணம் அதற்கென ஒதுக்கப்படுகிறது. வெளிப்படையாகச் சொன்னால், நான் அதைப் பார்ப்பது கூட இல்லை, எண்ணுவதும் இல்லை. அது நேரடியாக ஒரு நிதியில் போடப்படுகிறது; அந்த நிதி வெளிநாட்டு மிஷன்களுக்காக மட்டுமே செலவிடப்பட முடியும். அவ்வளவுதான். நான் அதில் வாழ் வதில்லை. சபை எனக்கு வாழ்வா தாரத்தைக் கொடுக்கிறது: வாரத்திற்கு நூறு டாலர்கள். அவ்வளவுதான் எனக்குக் கிடைக்கிறது, வாரத்திற்கு நூறு டாலர்கள். பின்னர் இந்த... இந்த நிதிகள் சுவிசேஷத்தைப் பரப்ப உதவுகின்றன. அவை ஒரு தனி நிதியில் உள்ளன; அது டாபர்னக்கிள் (Tabernacle) அறங்காவலர் குழுவால் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே அதை என் மீதோ, அல்லது எந்தவொரு தனிநபர் மீதோ, அல்லது வேறு எந்தக் காரியத்தின் மீதோ செலவிட முடியாது, வெளிநாட்டு மிஷனைத் தவிர. பின்னர் அங்கே போதுமான அளவு சேர்ந்தவுடன் (எனவே நாங்கள் அங்கு செல்லும் போது மக்களிடம் கேட்க வேண்டியதில்லை; அல்லது பணத்திற்காகக் கெஞ்ச வேண்டி யதில்லை; காணிக்கையோ அல்லது எதுவுமே எடுப்பதில்லை), உள்ளே சென்று உங்கள் பணத்தைச் செலவிடுகிறோம். எனவே இவற்றைக் கொண்டு சேர்ப்பதில் நீங்கள் என்னுடன் ஒரு பங்காளியாக இருக்கிறீர்கள் என்று நான் உணர்கிறேன். கர்த்தர் அவ்வளவு தொகையைச் சேர்க்கும்போது, எங்காவது செல்ல வேண்டும் என்ற உந்துதலை நான் உணர்கிறேன், உடனே நான் புறப்படுகிறேன். எனக்காக ஜெபியுங்கள், செய்வீர்களா? நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டும் என்பதுதான் நான் விரும்புவது. [ஒலிநாடாவில் காலியிடம்] உங்களை ஆசீர்வதிப்பாராக. நதிக்கு இக்கரையில் நான் உங்களை மீண்டும் பார்க்காவிட்டாலும், விடியற்காலையில், ஓ, அங்கே கீழே பயங்கர இருளாக இருக்கும்போது, உங்கள் அடையாளத்தை (Token) மட்டும் பிடித்துக்கொள்ளுங்கள். நினைவில் கொள்ளுங்கள், படகுக்குச் செல்லுங்கள், அவர் உங்களை உள்ளே ஏற்றுவார்; உங்கள் பயணக்கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது. உங்களிடம் அடை யாளம் (Token) இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அதை மட்டுமே அவர் அங்கீகரிப்பார். இப்போது, வார்த்தைக்குக் கனம் செலுத்தும் விதமாக மீண்டும் ஒரு நிமிடம் எழுந்து நிற்போம். இப்போது நாம் சுமார் முப்பது நிமிடங்கள், முப்பத்தைந்து நிமிடங்கள் தாமதமாக இருக்கிறோம். நான் சில நிமிடங்கள் மட்டுமே பேசுவேன், ஏனென்றால் நாம் ஒரு ஜெப வரிசையை (prayer line) நடத்தப் போகிறோம், ஜெப அட்டைகளை (prayer cards) வைத்திருக்கும் எல்லாரையும் அவர்களுக்காக ஜெபிப்பதற்கு அழைக்கப் போகிறோம். அதுதான் நமது வாக்குறுதி. 2 ஆனால் இப்போது நாம் வார்த்தைக்கு மரியாதை செலுத்தி நிற்கிறோம், நான் வேதத்தின் ஒரு பகுதியை வாசித்து, என் செய்திக்கு ஒரு சூழலைக் கர்த்தரிடம் கேட்கிறேன். நாம் எபிரேயர் 11-ம் அதிகாரத்திற்குத் திருப்புவோம், நான் வாசிக்கும்போது நீங்கள் பின்தொடர விரும்பினால் திருப்பலாம். விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதி யும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சிபெற்றார்கள். விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனு டைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படு கிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்தி ருக்கிறோம். 3 நாம் ஜெபம் செய்வோம். ஆண்டவரே, உமது வார்த்தையை ஆசீர்வதியும். அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறதோ அந்தக் கருவியைப் பரிசுத்தப்படுத்தும். அந்தக் கருவியானது வார்த்தையோடு இணைந்து, ஜீவனை வெளிக்கொண்டு வந்து, இந்த வார்த்தையை எங்களுக்கு முன்பாக மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்வதாக. இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம். 4 இப்போது சுமார் இருபது நிமிடங்களுக்கு உங்கள் முழு கவனத்தையும் எனக்குக் கொடுங்கள். என்னிடம் ஒரு சிறிய செய்தி இருக்கிறது, அதற்கு நான் தலைப்பு கொடுக்க விரும்புகிறேன்: கவுண்டவுன் (Count down - இறங்கு வரிசையில் எண்ணுதல்). 5 எல்லா காரியங்களிலும், வேதம் என்ன சொன்னது என்று கேட்டீர்களா? இருக்கிற வைகள், நாம் பார்க்கிறவைகள், இல்லாதவை களிலிருந்து உருவாக்கப்பட்டன, ஏனென்றால் காரியங்களை இருக்குமாறு அழைத்தது தேவனுடைய வார்த்தையே. இன்று நாம் அமர்ந்திருக்கும் உலகம், நாம் அமர்ந்திருக்கும் நாற்காலிகள், நமக்குக் கீழே உள்ள தரை, மண், மரங்கள், எல்லாமே தேவனுடைய வார்த் தையின் விளக்கமேயன்றி வேறில்லை. தேவன் அதை விளக்கும்போது, அது நிகழும்போது, அது அதை வெளிப்படுத்துகிறது. "உண்டாகக் கடவது," அது உண்டாயிற்று. "உண்டாகக் கடவது," அது உண்டாயிற்று. இயற்கை எவ்வாறு உருவாகிறது என்பதைப் பார்க்கும் போது இதை அறியலாம். 6 இயற்கையே என் வேதாகமமாக இருக்கிறது. நான் பேசியபோது, என் சபையார் அனைவருக்கும் தெரிந்தபடி, நான் உண்மை யிலேயே படிப்பறிவில்லாதவன், வாசிக்கத் தெரிந்ததே அரிது. எனக்கு ஏழாம் வகுப்பு கல்விதான் இருக்கிறது. எனக்கு நிறைய அனுபவம் இருந்தது. ஆனால், என் பிரசங்கத்தில், நான் என் உணர்த்துதலை (inspiration) எடுத்துக்கொண்டு, இயற்கையில் உள்ள ஏதோ ஒன்றோடு ஒப்பிட வேண்டும், அப்போதுதான் நான் என்ன பேசுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். புத்திசாலித்தனமான, படித்த மனிதர் பயன்படுத்துவது போன்ற வார்த்தைகளை என்னால் பயன்படுத்த முடியாது, ஏனென்றால் அதைச் செய்வதற்கான கல்வி எனக்கு இல்லை. எனவே நான் இயற்கையை எடுத்துக்கொண்டு, என் உணர்த்துதல் எனக்குச் சொல்வதை இயற்கையோடு ஒப்பிடுகிறேன். நான் பயங்கர தனிமையாக உணர்ந்தேன், ஆனால் ஒருமுறை... பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் அதைச் செய்ததாக நான் வேதாகமத்தில் வாசித்தேன். 7 தீர்க்கதரிசிகளில் பெரியவர் யோவான். அவர் ஒன்பது வயதாக இருந்தபோது, மேசி யாவை அறிமுகப்படுத்த வேண்டியிருந்ததால், ஆவியானவரால் வனாந்தரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார் என்பதை நாம் கவனிக்கிறோம். அவருடைய தந்தை ஒரு ஆசாரியர். பொதுவாக, அவர் தன் தந்தையின் வழியைப் பின்பற்றியிருப்பார். ஆனால், வேறொருவர் நினைக்கும் சில நெறிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு, அவரு டைய பணி மிக முக்கியமானதாக இருந்தது. அவர் தேவனிடமிருந்து தனது செய்தியைப் பெற வேண்டியிருந்தது. எனவே, முப்பது வயதில் அவர் வனாந்தரத்திலிருந்து வெளியே வந்தார், கல்வியறிவற்றவர், ஆனால் இருதயத்தில் எரியும் வைராக்கியத்துடனும், தேவனிடமிருந்து வந்த வெளிப்பாட்டுடனும், மேசியாவை அறிவிக்கப்போகிறார் என்ற தரிசனத்துடனும் வந்தார். அவர் அதை எவ்வளவு தெளிவாக அறிந்திருந்தார் என்றால், "நீங்கள் அறியாத ஒருவர் இப்போது உங்கள் நடுவில் நின்று கொண்டிருக்கிறார்," என்று சொன்னார். அதை நினைத்துப் பாருங்கள். "இங்கேயே, உங்கள் நடுவில் நின்று கொண்டிருக்கிற ஒருவரை நீங்கள் அறியவில்லை. அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்க நான் பாத்திரன் அல்ல, ஆனால் அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார். அவருடைய தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது." 8 அவருடைய பேச்சு முறையை நீங்கள் கவனித்தீர்களா? பரிசேயர்கள் வெளியே வந்தபோது அவர் அவர்களிடம் பேசினார். தீர்க்கதரிசியாக இருந்தபடியால், அவர் அவர்கள் இருதயத்தில் இருந்ததை அறிவார். அவர், "விரியன் பாம்புக் குட்டிகளே," அதாவது பாம்புகள் என்று சொன்னார். பாருங்கள், அவர்கள்... அவருக்குத் தெரியும் அந்த... 9 இப்போது, வேறு சில மனிதர்கள், "நீங்கள்," வேறு ஏதாவது சொல்லி இருக்கலாம், உங்களுக்குத் தெரியும், சில... ஒரு நல்ல, உயர்ந்த இலக்கணத்தைப் பயன்படுத்தி, "நீங்கள் முக்கியத்துவமற்ற வசதியற்றவர்களே," அல்லது நீங்கள் அதை எப்படி அழைக்க விரும்புகிறீர்களோ அப்படி அழைத்திருக்கலாம். அது தவறாக இருக்கலாம்; நான் அதை சும்மா எடுத்தாண்டேன், பாருங்கள். எனவே அவர் பயன்படுத்தக்கூடிய வேறு வார்த்தைகள் இருந்திருக்கலாம். 10 ஆனால், பாருங்கள், அவருடைய உணர்த்துதலில், ஒரு பாம்பு சிறியது, கீழ்த்தரமானது மற்றும் பதுங்கிச் செல்வது என்று அவருக்குத் தெரியும். எனவே அவர் சொன்னார், "விரியன் பாம்புக் குட்டிகளே (பாம்புகளின் சந்ததியே), வரப்போகிற கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளத் தொடங்காதீர்கள், 'நாங்கள் இதைச் சார்ந்த வர்கள், அதைச் சார்ந்தவர்கள்,' ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தேவன் இந்தக் கற்களிலிருந்தும்," அவர் வனாந்தரத்திலும் நதிக்கரையிலும் பார்த்த கற்களிலிருந்து, "ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை எழுப்ப வல்லவராயிருக்கிறார். இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேரருகே வைக்கப்பட்டிருக்கிறது." அவர் எதைப் பார்த்திருந்தாரோ அதைச் சொன்னார். வனாந்தரத்தில் இருப்பதைப் போல, "கனி கொடாத மரங்கள்," விறகுக்காக அவர் பயன்படுத்தியது அதுதான். பாருங்கள், "மரத்தின் வேரருகே வைக்கப்பட்டிருக்கிறது! நல்ல கனி கொடாத மரம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்." பாருங்கள், அவருடைய உணர்த்துதல் இயற்கையைப் பின்பற்றியது. 11 நீங்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்தால், நீங்கள் வார்த்தையை விட்டு வெகுதூரம் செல்ல மாட்டீர்கள், ஏனென்றால் தேவன் இயற்கையில் இருக்கிறார். நான் கடைசியாக இங்கே வெஸ்ட் கோஸ்ட்டில் (West Coast) இருந்தபோது, தேவனைப் பார்க்கும் நான்கு வழிகளைப் பற்றிப் பிரசங்கித்தேன் என்று நினைக்கிறேன்; அவருடைய குமாரனில் தேவன், அவருடைய வார்த்தையில் தேவன், இயற்கையில் தேவன், மற்றும் பல. 12 இயற்கையில் தேவன் படைத்த அனைத்தையும் நாம் கவனித்தால், ஆவிக்குரிய காரியங்களை இயற்கையான காரியங்களோடு ஒப்பிட்டு நான் பேசப் போகிறேன்... ஏனென்றால் அது காணப்படாதவைகளிலிருந்து உண்டானது. அது வார்த்தையாக இருந்தது. இப்போது நாம் உதாரணமாக எடுத்துக்கொள்வோம்... 13 சில மாதங்களுக்கு முன்பு, என்னுடைய அன்பான பழைய நண்பர் ஒருவருக்காக ஒரு சவக்காலப் பிரசங்கம் செய்யும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டேன். உங்களில் பலர் என் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்கள், நான் எங்கே... பாய் ஸ்கவுட்ஸ் (boy scouts) அல்லது அதுபோன்ற ஏதோ ஒன்றில் இருந்த ஒரு பையன்... அவன் தன் பழைய சாரணச் சீருடையை (scout suit) தேய்த்து முடித்த பிறகு எனக்காகச் சேமித்து வைக்கும்படி நான் அவனிடம் கேட்டேன். அவன் எனக்காக ஒரு கால் உறையைச் சேமித்து வைத்தான். புத்தகத்தில் உங்களுக்கு நினைவிருக்கும். நான் அதை அணிந்தேன். லாயிட் ஃபோர்ட் (Lloyd Ford), அவருடைய தாயார் சமீபத்தில் இறந்துவிட்டார், சுமார் எண்பத்தைந்து வயது, எனக்கு மிகவும் அருமையான நண்பர். லாயிட், இன்னும் திருமணமாகாதவர், தன் தாயுடன் தங்கியிருந்தார், அவர் என்னிடம் வந்தார். அவர் சொன்னார், "சகோதரர் பில்." அப்படித் தான் அவருக்கு என்னைத் தெரியும். நாங்கள்... நான் அவரை லாயிட் என்று அழைப்பேன், அவர் என்னை பில் என்று அழைப்பார். நான் கேட்டேன், "சகோதரர் லாயிட், உங்களுக்கு என்ன வேண்டும்?" அவர் சொன்னார், "நீங்கள் - நீங்கள் அம்மாவின் அடக்க ஆராதனையில் பிரசங்கிப்பீர்களா?" 14 நான் சொன்னேன், "அதைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இருந்தாலும் அது என் சொந்தத் தாயைப் போன்றது." நான் சொன்னேன், "அவர் எனக்கு எத்தனையோ முறை சமைத்துப் போட்டிருக்கிறார், மேலும் என்னிடம் மிகவும் அன்பாக இருந்திருக்கிறார்." 15 அவர் சொன்னார், "அவர் மீது அந்த கடைசி வார்த்தைகளை நீங்கள் பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன், சகோதரர் பிரான்ஹாம்." 16 நான் கேட்டேன், "நான் என்ன சொல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், லாயிட்?" 17 அவர் சொன்னார், "நீங்கள் செய்ய வேண்டிய ஒரு விஷயம். என் மக்களுக்கு உறுதிப் படுத்துங்கள், அவளுடைய உயிர்த்தெ ழுதலை எங்களுக்கு உறுதிப்படுத்துங்கள்." 18 எனவே நான் யோபு புத்தகத்திலுள்ள ஏதோ ஒன்றிலிருந்து ஒரு வேதபகுதியை எடுத்தேன், யோபு இயற்கையை எப்படிக் கவனித்தார் என்பதைப் பற்றி. நான் சொன்னேன், என்... 19 சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த என் சொந்தத் தாயாரின் மரணத்தின் போது. என் தங்கை அப்போதுதான் இரட் சிக்கப்பட்டிருந்தாள், அம்மா போகிறாள் என்று தெரிந்ததும் அவள் என்னை அழைத்தாள். அவள் சொன்னாள், "பில், நான் என்ன செய்ய முடியும்?" சொன்னாள், "இனிமேலும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, அங்கே நின்று என் அம்மாவைப் பார்ப்பதை." நான் சொன்னேன், "நான் பார்த்ததிலேயே மிகவும் இனிமையான காட்சி அதுதான்." அவள் சொன்னாள், "உன் அம்மாவைப் பார்த்து, உன்னால் எப்படி அப்படிச் சொல்ல முடிகிறது?" 20 "ஓ," நான் சொன்னேன், "அவர் செல்லத் தயாராக இருக்கிறார், செல்ல விரும்புகிறார். அவர் வயதானவர், இந்த வாழ்க்கையை விட்டுக்கடந்து செல்லத் தயாராக இருக்கிறார்." 21 நான் அவரிடம் (தாயாரிடம்) சொன்னேன், "அம்மா, இயேசு இன்னும் உங்களுக்கு அர்த்தமுள்ளவராக இருக்கிறாரா? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்ற நாளில் அவர் இருந்தது போலவே?" அவர், "ஆம்," என்று சொல்வார். எப்போது, நான்... அவரால் இனி அதைச் செய்ய முடியாத போது, நான் சொன்னேன், "புன்னகைக்கவும்." 22 அவர் மிகவும் சோர்ந்துபோய், அவரால் சிரிக்கவோ பேசவோ முடியாதபோது, நான் சொன்னேன், "அம்மா, நீங்கள் மரித்துக் கொண்டிருக்கிறீர்கள்." அவர் என் கையில் இருந்தார். நான் சொன்னேன், "அம்மா, இயேசு கிறிஸ்து இன்னும் உங்களுக்கு அதேபோல அர்த்தமுள்ளவராக இருந்தால், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றபோது அவர் இருந்ததைவிட இனிமையானவராக அல்லது அதேபோல இருந்தால்... நான் உங்கள் போதகர் மகன். நான் பொதுமக்களைச் சந்திக்க வேண்டும். நீங்கள் மரிக்கும்போது இயேசு உங்களுக்கு அர்த்தமுள்ளவராக இருக்கிறாரா? அப்படி யானால், உங்களால் பேச முடியாவிட்டால்..." அவரால் பேச முடியவில்லை. நான் சொன்னேன், "உங்களால் பேச முடியாதா, அம்மா?" அவரால் அசைய முடியவில்லை. நான் சொன்னேன், "உங்கள் கண்களை வேக வேகமாக இமையுங்கள்." அவர் தன் கண்களை வேகமாக இமைக்கத் தொடங்கினார், அவர் கன்னங்களில் கண்ணீர் வடிந்தது. அவரால் இனி பேசக்கூட முடியவில்லை, ஆனால் அவருக்குள்ளிருந்த உணர்வுகள் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தை உணர்ந்தன. சில நிமிடங்களில், ஒரு காற்று அறைக்குள் வீசியது, அம்மா அதோடு கூட தேவனைச் சந்திக்க வெளியே சென்றார். 23 இப்போது, இந்தப் பெண்மணி இறந்தபோது, நான் சொன்னேன், "உயிர்த்தெ ழுதலில் நம்பிக்கை இருக்கிறதா?" நான் சொன்னேன், "எல்லாமே..." 24 நான் வானத்தின் கீழுள்ள நடை முறையில் ஒவ்வொரு தேசத்து மக்களிடமும் பேசும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன். நான் எல்லா வகையான தெய்வங்களையும் எல்லா வகையான மதங்களையும் பார்த்திருக்கிறேன், ஆனால் கிறிஸ்தவத்தைத் தவிர வேறு எதுவும் உண்மையில்லை. அது ஒன்றுதான். இயற்கையே கூட கிறிஸ்தவத்திற்காக, சிருஷ்டிகராகிய தேவனுக்காகப் பேசுகிறது! 25 பாருங்கள், அங்கே வாழ்க்கை, மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் இருக்கிறது. உயிர்த்தெழுதல்! முழு... இதைப் பார்க்காமல் உங்களால் வெளியே செல்ல முடியாது. வசந்த காலத்தில் வரும் இலைகளைக் கவனியுங்கள். அவை தங்கள் இளமைப் பருவத்திற்கும், நடுத்தர வயதிற்கும், பின்னர் முதிர்வயதிற்கும் வருவதைக் கவனியுங்கள். இலைகளிலுள்ள நரம்புகள் உயிரைத் தாங்கிச் செல்கின்றன. சில நிமிடங்களில், ஏதேனும் உறைபனி விழுவதற்கு முன்பே, அந்த இலைகள் உதிர்ந்து விடுவதை நீங்கள் காண்பீர்கள். என்ன நடக்கிறது? அந்த மரத்தில் இருக்கும் உயிர், அந்த மரச்சாறு, வேர்களுக்குள் இறங்குகிறது. அப்படி இல்லையென்றால், குளிர்காலக் குளிர் மரத்தைக் கொன்றுவிடும், உயிரைக் கொன்றுவிடும். அதனால் மேலே இருக்க முடியாது. அது கீழே சென்று தன்னை அடக்கம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் வருடத்தின் வசந்த காலத்தில், இதோ அது மீண்டும் ஒரு புதிய இலையுடன் திரும்பி வருகிறது. ஒரு வாழ்க்கை, ஒரு மரணம், ஒரு அடக்கம், ஒரு உயிர்த்தெழுதல் இருக்கிறது என்று அது சாட்சியமளிக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு நிழலாட்டம் (typing). இதிலிருந்து நம்மால் விலகவே முடியாது. 26 காலையில் உதிக்கும் சூரியனைக் கவனியுங்கள், வானத்தை ஒளிரச் செய்யும் சூரியன். அது தாயின் கைகளில் தாலாட்டப்படும் ஒரு சிறு குழந்தையைப் போன்றது, அது பலவீனமாக இருக்கும்போது, ​​அதிக உயிர் இல்லாமல், அதிக வலிமை இல்லாமல் இருக்கிறது. பின்னர் சுமார் எட்டு மணிக்கு, அது பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. பதினொன்றரை மணிக்கு, அவள் பட்டம் பெற்று, உயர்நிலைப் பள்ளியிலிருந்தும் கல்லூரியிலிருந்தும் வெளியேறுகிறாள். பின்னர் சுமார் பன்னிரண்டு முதல் இரண்டு வரை அவள் தன் வலிமையில் இருக்கிறாள். பின்னர் அவள் பலவீனமடையத் தொடங்குகிறாள், மேலும் மேலும் பலவீனமடைந்து, கடைசியில் ஒரு வயதான ஆண் அல்லது பெண்ணைப் போல மிகவும் பலவீனமாகி, கீழே செல்கிறாள். அதுதான் அதன் முடிவா? "ஒரு உயிர்த்தெழுதல் இருக்கிறது, மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இருக்கிறது," என்று சாட்சி சொல்ல அடுத்த நாள் காலையில் அவள் திரும்பி வருகிறாள். 27 எல்லாமே சாட்சி சொல்கின்றன. இயற்கை அனைத்தும் சாட்சி சொல்கிறது. வார்த்தை அதற்குச் சாட்சி சொல்கிறது. நம் இருதயத்தில் உள்ள ஆவியானவரே அதற்குச் சாட்சி சொல்கிறார். நமக்குள்ளே இருக்கும் ஏதோ ஒன்று, "மரித்தோரின் உயிர்த்தெழுதல் ஒன்று இருக்கிறது," என்று கூப்பிடுகிறது. எனவே, பாருங்கள், சொல்வதற்கு... 28 எல்லாமே தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றினால், அதற்கு ஒரு உயிர்த்தெழுதல் உண்டு. ஆனால் அது தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றினால் மட்டுமே எழும்ப முடியும். ஒரு மலர் இருந்து அது கருவுறாவிட்டால், அது மீண்டும் எழும்பப்போவதில்லை. நீங்கள் சோளத்தை விதைத்து, அது கருவுறாவிட்டால், அது மீண்டும் எழும்பப்போவதில்லை. தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றாத எதற்கும் உயிர்த்தெழுதல் இல்லை. ஆனால் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றும் எதையும் உங்களால் மண்ணில் வைத்திருக்க முடியாது. அது உயிர்த்தெழுதலைப் பற்றிச் சாட்சி சொல்ல மீண்டும் வெளிவருகிறது. இந்தக் காரியங்கள் அனைத்தும் சரியானவை என்று நாம் அறிவோம். அவை நமக்குச் சாட்சிகளாகவும், நம்மை உற்சாகப்படுத்தவும் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும், நீங்கள் பார்க்கும் எல்லா இடங்களிலும், நீங்கள் தேவனைக் காண்கிறீர்கள். 29 ஒரு சரீரப்பிரகாரமான சரீரம் இருக்கிறது, ஒரு மக்கள் கூட்டம். ஒரு ஆவிக்குரிய சரீர மக்கள் கூட்டம் இருக்கிறது. 30 ஒரு சரீரப்பிரகாரமான மணவாட்டி இருக்கிறாள். நல்ல இளம் தம்பதியரைத் திருமணம் செய்து வைக்கும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. நான் அதை ஒருபோதும் நினைப்பதில்லை... ஒரு சிறிய மூட நம்பிக்கைக்காக நான் அவர்களைத் திருப்பு கிறேன், நான் என் முதுகை கிழக்கு நோக்கியும், அவர்கள் கிழக்கை நோக்கியும் நிற்கிறார்கள். நான் அவர்களைப் பார்க்கும்போது, அவர்களின் இருதயங்கள் ஒன்றாகத் துடிப்பதை, கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியுமாக நினைக்கிறேன். ஒரு சரீரப்பிரகாரமான மணவாட்டி இருக்கிறாள், ஒரு சரீரப்பிரகாரமான மணவாட்டி இருப்பதால், அது ஒரு ஆவிக்குரிய மணவாட்டி இருக்கிறாள் என்பதற்கு ஒரு சாட்சி மட்டுமே. ஒரு ஆவிக்குரிய மணவாட்டி இருக்கிறாள், ஏனென்றால் ஒரு சரீரப்பிரகாரமான மணவாட்டி இருக்கிறாள். 31 இந்த இயற்கையான நிகழ்வுகள் அனைத்தும், இப்போது, அவை ஆவிக்குரிய நிகழ்வுகளுக்கு முன்னோடியாக இருக்கின்றன. ஒவ்வொரு நிகழ்வும் மற்ற நிகழ்வுடன் வருகிறது, அது அதை மேம்படுத்துகிறது. நீங்கள் கேட்கலாம், "அது எப்படிப் பட்டது?" 32 சரி, ஒரு ஆவிக்குரிய ஜீவன் இயற்கையான வாழ்க்கைக்குள் வரும்போது, அது இயற்கையான வாழ்க்கையை மேம் படுத்துவது போல. இயற்கையான வாழ்க் கையில் நீங்கள் இருந்ததை விடச் சிறந்த நிலையில் அது உங்களை உருவாக்குகிறது. 33 இலை பழமையாகி மரிக்கும் போது, உயிர்த்தெழுதலில் மீண்டும் உயிருடன் வரும்போது, மற்றொரு வருடத்தில் சாட்சி சொல்ல, அது கீழே சென்றபோது இருந்ததை விடச் சிறந்த நிலையில் திரும்பி வருகிறது. பாருங்கள், எல்லாமே இந்தக் காரியங்களைக் குறித்துச் சாட்சி சொல்கின்றன. 34 இப்போது, மனிதன் பூமியில் செய்ய முடிந்த சாதனையை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இந்த இயற்கையான சாதனைகள் அனைத்திலும்... எனக்கு இப்போது உங்கள் முழு கவனம் வேண்டும். பூமியில் நடந்த அனைத்து இயற்கையான சாதனைகளும், தேவன் தனது சபையின் மூலமாகச் செய்த ஆவிக்குரிய சாதனைகளுக்கு முன்னோடிகளாக இருந்தன. எல்லா இயற்கையான காரியங்களும் ஆவிக்குரிய காரியங்களின் ஒரு நிழலாட்டம் (type). இப்போது நீங்கள் சொல்லலாம், "அது எப்படி?" 35 போக்குவரத்தை (transportation) உதாரணமாக எடுத்துக்கொள்வோம். முதலில், போக்குவரத்து குதிரை மூலம் இருந்தது. அடுத்தது, ஆட்டோமொபைல் மூலம் இருந்தது. பிறகு விஞ்ஞானம் நமக்கு ஒரு விமானத்தை உருவாக்கியது. ஆனால், பாருங்கள், அது ஒரு... முதலில், ஒரு குதிரைத்திறன் (horsepower). கார் ஒருவேளை இருபது குதிரைத்திறன் கொண் டதாக இருந்தது. விமானம் நூற்றுக்கணக்கான குதிரைத்திறன் வரை செல்கிறது. அது என்னவென்று புரிகிறதா? நாம் குதிரையுடன் வந்ததைப் போலவே, பின்னர் ஒரு ஆட்டோமொபைல் உருவாக்கப்பட்டது, பின்னர் அடுத்தது ஒரு விமானம். நாம் தொடர்ந்து சாதித்துக்கொண்டே இருக்கிறோம், உயர்ந்தும் உன்னதமாகவும், பெரிதாகவும் போய்க்கொண்டே இருக்கிறோம். இது அறிவியலின் சாதனை. இது தேவனுடைய ஆவியானவர், அவருடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையில் செய்த ஆவிக்குரிய காரியங்களுக்கு ஒரு முன்னோடியாகும். 36 சுபாவ மனிதன், அறிவினால், தன் சாதனைக்காகப் பின்னோக்கிப் பார்க்கிறான்; அது விஞ்ஞானம், முந்தைய படைப்பில் தேவன் என்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்க்கிறான். அவர்கள் வெளியே சென்று மண் கட்டிகளை எடுத்து, பாறைத் துண்டுகள் மற்றும் படிமங்கள் மற்றும் கூறுகளை எடுத்து, அவற்றை ஒன்றாக இணைக்கிறார்கள். பாருங்கள், அந்தச் சாதனையில், அவர்கள் தேவன் செய்ததை எடுத்து, அதன் அசல் நிலையிலிருந்து அதைத் திரித்து, படைக்கப் பட்டதைக் கொண்டு அவனது தங்குமிடங் களையும், மற்றவற்றையும், அவனது பொருளா தாரத்தையும் கொஞ்சம் சிறந்ததாக்குகிறார்கள். அது மனிதனின் இயற்கையான சாதனையில் இருக்கிறது. 37 ஆனால் தேவன், ஆவிக்குரிய சாதனையில், முன்னோக்கிச் செல்கிறாரே தவிர, பின்னோக்கிச் செல்லவில்லை. அவர் முன்னோக்கிச் செல்கிறார், வார்த்தையை உற்றுநோக்கி, இன்னும் வராத காரியங்க ளுக்காகவும், தேவன் வாக்குத்தத்தம் செய்த ஆவிக்குரிய காரியங்களை வெளிப்படுத்தும் ஆவிக்குரிய வெளிப்பாடுகளுக்காகவும் வாக்குறு திகளை நம்புகிறார். அவை நிறைவேறுவதை அவர் காண்கிறார். விஞ்ஞானி தனது ஆய்வகத்தில் மனிதனுக்கு உதவ பல்வேறு விஷயங்களில் வேலை செய்து, படைப்பை எடுத்துக்கொள்வதைப் போலவே; ஆவிக்குரிய மனிதன் தேவன் வாக்குத்தத்தம் செய்த, ஆனால் இன்னும் சிருஷ்டிக்கப்படாத ஒன்றை எதிர்நோக்கியிருக்கிறான். சுபாவ மனிதன் பின்னோக்கிப் பார்க்கிறான். ஆவிக்குரிய மனிதன் முன்னோக்கிப் பார்க்கிறான். 38 அவர்கள் சபையில் அதை அப்படித்தான் வைத்திருக்கிறார்கள். சுபாவ சபை அங்கத்தினன் ஃபின்னி (Finney), சாங்கி (Sankey), நாக்ஸ் (Knox), கால்வின் (Calvin) ஆகியோரைப் பின்னோக்கிப் பார்க்கிறான். அது சரியே, ஆனால் அது அவர்களுடைய காலம். நாம் வேறொன்றை, அதைவிடப் பெரியதும் உயர்ந்ததுமான வாக்குத்தத்தத்தையும், தேவன் என்ன வாக்குத்தத்தம் செய்திருக்கிறாரோ அதையும் எதிர்நோக்கியிருக்கிறோம். விஞ்ஞானம் அதை எடுக்கப் பின்னோக்கிச் செல்கிறது. தேவன் எதைச் சாதித்திருக்கிறார் என்பதைக் கண்டறிய நாம் கர்த்தருடைய வார்த்தையில் முன்னோக்கிச் செல்கிறோம். 39 இந்த இரண்டு விஷயங்களில், ஒன்று மற்றொன்றிற்கு முன்னோடியாக இருக்கிறது, அல்லது அதை நிழலாட்டமாகக் காட்டுகிறது. இப்போது விஞ்ஞானம் எப்படி அதிக குதிரைத்திறனை அடைய முடிந்ததோ, அதாவது சக்தியை எடுத்துக்கொண்டு சிறந்த கருவிகளை, ஆட்டோக்கள் மற்றும் விமானங்களை உருவாக்கியது போல; தேவன் அதே முறையில் சாதித்திருக்கிறார், ஒவ்வொன்றும் அதை நிழலாட்டமாகக் காட்டுகிறது. இப்போது கவனியுங்கள். 40 லூதரின் நாட்களில் வெகு காலத்திற்கு முன்பு, அவர்களின் சக்தி குதிரைத்திறனாக இருந்தது. பின்னர் தேவன், லூதரைத் தன் கைகளில் எடுத்து, ஒரு பெரிய அமைப்பு அல்லது ஒரு அமைப்பிலிருந்து அவரைக் கட்டுப்படுத்தி, "நீதிமான் விசுவாசத்தினாலே பிழைப்பான்" என்று அந்த மனிதனைப் பார்க்க வைத்தார். அவர் நீதிமானாக்கப்படுதலை (justification) அடையப்பெற்று, அதைப் பிரசங்கித்தபோது, சபை உயிருடன் வந்தது. அது உயிருடன் வந்து, குதிரை வண்டிகள் மற்றும் குதிரை மற்றும் சாரட்டு வண்டி நாட்கள் மங்கி மறையத் தயாராக இருந்த குதிரைத்திறன் நாட்களில், கொஞ்சம் கொஞ்சமாக நகரத் தொடங்கியது. இப்போது, அவர் நீதிமானாக்கப்படுதலை அடைந்தார், அதன் மூலம், இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் சபை ஜீவனைப் பெற்றது. எதையோ எடுத்துக்கொள்வதல்ல... நீங்கள் சொல்கிறீர்கள், "நான் சபையை நம்புகிறேன். நான் இதை நம்புகிறேன்." 41 "அவரை விசுவாசிப்பதே ஜீவன்." விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்! லூதர் அதைப் பிரசங்கித்தார். அது குதிரை மற்றும் வண்டி நாட்களால் நிழலாட்டமாகக் காட்டப்பட்டது. 42 பிறகு இங்கிலாந்தில் ஜான் வெஸ்லி (John Wesley) என்ற பெயருள்ள ஒரு மனிதரைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, எல்லா இசம்களையும் (isms - கொள்கைகளை) அவரிடமிருந்து அகற்றினார். ஜான் வெஸ்லி மூலமாக, சபைக்குள் பரிசுத்தமாக்கப்படுதலை (sanctification) கொண்டு வர அவரால் முடிந்தது. பரிசுத்தமாக்கப்படுதல் சபையை அதன் காலில் நிற்க வைத்து, நடக்கச் செய்தது. வெஸ்லி காலத்தின் முடிவில் ஆட்டோ மொபைல் இருந்தது, வெஸ்லி சபையின் முடிவில் என்பதை நாம் உணர்கிறோம். இல்லை... பாருங்கள், ஒவ்வொரு சீர்திருத்த வாதியும் ஒரு காலகட்டத்தின் முடிவில் வருகிறார்கள். வெஸ்லியின் சபைக்காலத்தின் கடைசியில், அது பெந்தெகொஸ்தே நாட்களுக்கு முன்பாக வந்தது என்பதை நாம் காண்கிறோம். ஏன், பரிசுத்தமாக்கப்படுதலின் மூலம், உலகத்தின் காரியங்களிலிருந்து விலகி நடப்பதற்குச் சபைக்குப் போதுமான பலன் கிடைத்ததை நாம் பார்க்கிறோம். பரிசுத்தமாக்குதல் என்றால் "தேவ மகிமைக்காகப் பிரித்தெடுத்தல்" என்று அர்த்தம். அது அதை இழந்தது வருந்தத்தக்கது. ஆனால் அது போதுமான பலத்தைப் பெற்றது. குதிரை மற்றும் வண்டி நாளில் லூதர் அதற்கு வெளிச்சம் கொடுத்தார். 43 வெஸ்லி அதை நடக்க வைக்கும்படித் தன் காலில் நிற்க வைத்தார்; பரிசுத்தமாக் கப்படுதல், உலகத்தின் காரியங்களிலிருந்து பிரித்தெடுத்தல். அதன் மூலமாகப் பில்கிரிம் ஹோலினஸ் (Pilgrim Holiness), மற்றும் நசரேயர்கள் (Nazarenes) போன்ற சிறிய கிளைகள் மற்றும் பரிசுத்தமாக்கப்படுதலின் மூலம் வந்த எவையெல்லாம் உண்டோ அவை வந்தன. 44 ஆனால், நினைவில் கொள்ளுங்கள், அவர்களால் அசையாமல் இருக்க முடியவில்லை. அக்கினி ஸ்தம்பம் வெளியே நகர்ந்தது. அவர்கள் கலிபோர்னியாவில் உள்ள அசுசா ஸ்ட்ரீட்டிற்கு (Azusa Street) வந்தார்கள். பின்னர் அது என்ன செய்தது? அவர்கள்... ரைட் சகோதரர்கள் (Wright brothers) மூலம் ஒரு பறக்கக்கூடிய விமானத்தைச் சாதிக்கத் தேவன் முடிந்தபோது... அல்லது மனிதனால் முடிந்தபோது, அது ஆட்டோமொபைலில் இருந்து விமான நாட்களைப் பிரதிநிதித் துவப்படுத்தியது. உடனடியாக, அதற்கு முன்னோடியாக, அசுசா ஸ்ட்ரீட் பெந்தெ கொஸ்தே இறங்கியது, மேலும் மனிதன் இயற்கைக்கு அப்பாற்பட்ட, அறியப்படாத வானத்திற்குள் சென்றான். அவன் அறியாத பாஷைகளில் பேசினான், சபைக்கு அந்நியமான அறியாத காரியங்களைச் செய்தான், ஏனென்றால் அவன் தரையிலிருந்து எழும்பினான், அவன் (காற்றை) வானத்திற்குள் சென்றான். எது அதைச் செய்தது? விமானங்கள் வந்த உடனேயே, அவன் வானத்திற்குச் சென்றான். விமானங்கள் மூலம், தனது சபை எழும்புகிறது என்று தேவன் காட்டினார். ஆவிக்குரிய ரீதியில் என்ன நடக்கிறது என்பதை அவர் இயற்கையான காரியங்கள் மூலம் காட்டுகிறார். அவை எப்போதும் பின்தொடர் கின்றன. இரண்டு ஆண்டுகளாக நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து, கிறிஸ்துவைக் கண்டுபிடிக்க ஞானிகள் நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்தது போல. 45 இப்போது கவனியுங்கள், அந்த விஷயங்கள் அனைத்தும் மனிதன் சாதித்த சாதனைகள், தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கான நிழலாட் டங்களும் முன்மாதிரிகளும் மட்டுமே. அவர் எப்போதும் அந்த வழியில் தான் செய்கிறார். வானத்தில் இருக்கும் அடையாளங்கள், கிறிஸ்துவின் வருகைக்கு முன்பு நிகழப்போகும் காரியங்களை அவர் நமக்குச் சொல்லி யிருக்கிறார். நாம் இப்போது அதைப் பார்க்கிறோம். அது ஒரு சுட்டிக்காட்டும் கம்பம் மட்டுமே. விஞ்ஞானம் எவ்வாறு சாதித்துள்ளது என்பதையும், தேவன் தனது சபையின் மூலம் எவ்வாறு சாதித்துள்ளார் என்பதையும் நாம் பார்க்கிறோம். 46 ஒரு மனிதன் விமானத்தில் சவாரி செய்வானா? அவன் வேடிக்கைக்காக விரும்பினால் ஒழிய, இனி குதிரை மற்றும் வண்டியை விரும்ப மாட்டான். ஆனால் குதிரை மற்றும் வண்டி... நினைவில் கொள்ளுங்கள், விமானத்தில் உள்ள சக்தி என்ன? இன்னும் அதிகமான குதிரைகள் சேர்க்கப்பட்டுள்ளன, அவ்வளவுதான். 47 ஆகவே, ஜான் வெஸ்லி பரிசுத்தமாக் கப்படுதலைக் கண்டபோது, நீதிமானாக்கப் படுதலிலிருந்து ஒரு பிரித்தெடுக்கப்பட்ட வேலை, அவர் நீதிமானாக்கப்படுதலை ஒருபோதும் கண்டிக்கவில்லை, அவர் அதற்கு அதிக சக்தியை மட்டுமே சேர்த்தார். புரிகிறதா? 48 பெந்தெகொஸ்தே மக்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும், வரங்களின் மறுஸ்தாபிதத்தையும் கண்டபோது, அவர்கள் பரிசுத்தமாக்கப்படுதலையோ அல்லது நீதிமா னாக்கப்படுதலையோ மறுக்கவில்லை, அவர்கள் அதிக சக்தியைப் பெற்று மேலே எழும்பினார்கள், மேலே சென்றார்கள், ஏனென்றால் அவர் அதிக சக்தியைக் கண்டார். புரிகிறதா? 49 அந்தக் காரியங்கள் அனைத்தும், அவை வரும்போது நிழலாட்டமாகக் காட்டுகின்றன. நமக்கு நேரம் இருந்திருந்தால், நாம் உண்மையில் அதிலேயே இருந்திருக்கலாம், ஆனால் நம்மிடம் இல்லை. ஆனால் அவர் எழுப்பினார். விஞ்ஞானம் எதையாவது சாதிக்கும்போது, பின்னோக்கிப் பார்க்கிறது; தேவன் சாதிக்கிறார், இந்த வழியில் செல்கிறார், ராஜ்யத்தை நோக்கி முன்னோக்கிச் செல்கிறார். 50 இப்போது நாம் பார்க்கிறோம், அசுசா ஸ்ட்ரீட்டிலிருந்து, விமானங்கள் பெரிய எழுப்புதல்களில் புறப்பட்டு, உலகத்தை அறியப் படாத, பரலோக இடங்களில், அறியப்படாத பாஷைகளில் பேசி, உலகிற்கு அறியப்படாத வரங்களுடன் வலம் வந்தன. ஏன், அவர்கள் இவர்களை வெறியர்கள் என்று நினைத்தார்கள், ஆனால் அவர்களால் முடிந்தது... தேவன் ஒரு கூட்டத் தங்களைத் தன் கைகளில் பெற்றார். அசுசா ஸ்ட்ரீட்டில் இங்கே ஒரு சிறிய, மாறு கண் கொண்ட நீக்ரோ மனிதனைப் பெற்றார், தேவன் சொன்னது சத்தியம் என்று நம்புவதைத் தவிர அவருக்கு வேறு அறிவு இல்லை. அது சரியே. 51 பாருங்கள், விஞ்ஞானம் ஒரு மனிதனின் தலையில் ஞானத்தையும் அறிவையும் புகட்டி, பின்னோக்கிச் சென்று இந்தக் காரியங்களைக் கண்டறிய வேண்டியிருக்கும் போது; தேவன் ஒரு மனிதனைப் பயன்படுத்தும்படிக்கு, அவனுக்குள் (சுயமாக) இருப்பதை அவனி லிருந்து வெளியே எடுக்க வேண்டியிருக்கிறது. ஒன்று இந்த வழியில் செல்கிறது, மற்றொன்று அந்த வழியில் செல்கிறது. ஒன்று கீழே செல்கிறது, மற்றொன்று மேலே செல்கிறது. 52 இப்போது, பெந்தெகொஸ்தே மக்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதோடும், குணமாக்கும் சிறந்த வரங்களோடும் எழும்பிய போது, அது இந்த அறிவுஜீவி சபைகளைத் தரையிலேயே விட்டுச் சென்றது. அவர்கள் நோயாளிகளைக் குணமாக்கினார்கள். அவர்கள் பெரிய காரியங்களைச் செய்தார்கள். அவர்கள் அதைச் செய்தார்கள். அவர்கள் அதைச் செய்தார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்கள் அதைச் செய்தார்கள் என்பதற்கு அதுவே அத்தாட்சி. நிச்சயமாக அது செய்தது! அவர்கள் இந்த அறிவுஜீவி சபையைத் தரையில் அமர்ந்திருக்க விட்டுச் சென்றார்கள். "உங்களால் முடியாது," என்று அவர்கள் சொன்னாலும் பரவாயில்லை. எப்படியிருந்தாலும் இவர்கள் அதைச் செய்தார்கள். நீங்கள்... 53 ஒரு கவண் வில்லைச் (gum-bow) சுட்டதற்காகச் சிறையில் இருந்த சிறுவனைப் போல. யாரோ ஒருவர் உள்ளே வந்து, அந்தச் சிறுவனைப் பார்க்க வந்த ஒருவர் சொன்னார், "ஓ, அதற்காக அவர்களால் உன்னைச் சிறையில் அடைக்க முடியாது!" அதற்கு அவன் சொன்னான், "அவர்களால் முடியாதா?" அவன் ஏற்கனவே அங்கேதான் இருந்தான். 54 "பரிசுத்த ஆவி வேறொரு காலத்திற் குரியது," என்று அவர்கள் சொல்வதும் அப்படித் தான் இருக்கிறது. அவர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள்! அது இங்கே இருக்கிறது! நமக்கு அது தெரியும். நாம்... கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக அதனுடனே காற்றில் பறந்து கொண்டிருக்கிறோம், அறிவுஜீவி மக்களுக்கு ஒன்றும் தெரியாத காரியங்களைக் கண்டு கொண்டிருக்கிறோம். அவர்களால் செய்ய முடிந்தது ஒன்றுதான், உட்கார்ந்து கொண்டு அதைக் கேலி செய்வதுதான். 55 ஒருமுறை ஒரு தொழுவத்திலிருந்து ஒரு கன்றுக்குட்டி வெளியே வந்தது போல, அது கொழுத்து உருண்டையாக இருந்தது. அது தன் கால்களைத் தூக்கித் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு நல்ல விவசாயி இருந்தார், அவர் அதற்கு நன்றாக உணவளித்தார், அது வைட்டமின்கள் நிறைந்து உருண்டையாக இருந்தது. அங்கே மற்றொரு சோம்பேறி விவசாயி இருந்தார், அவரிடம் ஒரு சிறிய கன்றுக்குட்டி இருந்தது, அதுவும் அந்தத் தொழுவத்தில் அந்தக் குளிர்காலத்தில் பிறந்தது, அந்தச் சிறிய குட்டி களைகளைத் தவிர வேறு எதையும் சாப்பிடவில்லை. அது வெளியே வந்தபோது, அது மிகவும் மெலிந்திருந்ததால் அதனால் நகரவே முடியவில்லை, ஒவ்வொரு முறையும் காற்று வீசும்போதும் அது அதை பக்கவாட்டில் தள்ளியது. இந்தக் கிழட்டுக் கன்றுக்குட்டி, அந்தச் சிறிய கொழுத்த கன்றுக்குட்டி தன் கால்களைத் தூக்கித் துள்ளிக் குதித்து, மிக மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டது. உங்களுக்குத் தெரியும், அது வேலியின் இடுக்கு வழியாகப் பார்த்து, "இ-இ-இப்படிப்பட்ட மதவெறி!" என்று சொன்னது. அது வைட்டமின் நிறைந்ததாக இருந்தது, அதனால் தான் அது தன் கால்களைத் தூக்கித் துள்ளிக் குதித்தது என்பதில் ஆச்சரியமில்லை. 56 ஒரு மனிதன் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படும்போது, அவனுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது, அது தேவனுடைய ஆவிக்குரிய வைட்டமினால் நிரம்பியிருக்கிறது, அது அவனைத் தேவனைத் துதிக்கவும், சத்தமிடவும், வித்தியாசமாகச் செயல்படவும் வைக்கிறது. ஏன்? அவன் இனி பூமிக்குரியவன் அல்ல. அவன் பரலோகங்களில், கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான். 57 அவன் அவர்களை அவர்களின் மிதி வண்டிகளுடனும் ஆட்டோமொபைல் களுடனும் பூமிக்குரியவர்களாக விட்டுச் சென்றான், ஆம் ஐயா. நடைமுறையில் அவர்களை அங்கிருந்து, காலாவதியான இடத்திற்கு வெளியேற்றி யிருக்கிறான். அவர்கள் நோயாளிகளைக் குணமாக்கினார்கள். அவர்கள் அறியாத பாஷைகளில் பேசினார்கள், அநேக காரியங்களைச் செய்தார்கள். 58 ஆனால் இப்போது, நண்பர்களே, நான் இதைச் சொல்லலாமா. இது விண்வெளி வீரர் (astronaut) காலத்திற்கு வந்திருக்கிறது. நாம் விமானக் காலத்திலிருந்து வெளியேறிவிட்டோம். இப்போது நமக்கு அதிக சக்தி கிடைத் திருக்கிறது. விண்வெளி வீரர் காலம் உள்ளே வந்திருக்கிறது. அது என்ன? ஒரு... நாம் ஒரு ஆவிக்குரிய விண்வெளி வீரர் காலத்திற்குள் வந்திருக்கிறோம், பாருங்கள், மேலே செல்கிறோம். அது... அது அதே ஆவிதான், ஆனால் அதிக வல்லமை மட்டுமே, இன்னும் உயரமாகத் தூக்கப்படுகிறது, இன்னும் உயரமாகச் செல்ல முடியும், அதிகம் பார்க்க முடியும், அதிகம் விசுவாசிக்க முடியும், கிறிஸ்துவைப் போல இன்னும் அதிகமாக இருக்க முடியும். ஆட்டோமொபைல் அல்ல, குதிரை மற்றும் வண்டி அல்ல, விமானம் கூட அல்ல, ஆனால் விண்வெளி வீரர், அவன் ஒவ்வொன்றிற்கும் மேலாகச் செல்கிறான். 59 வேதாகமத்தில் இது கழுகு காலம் என்று அழைக்கப்படுகிறது. தேவன் தனது தீர்க்கதரிசிகளை... கழுகு காலம்! வேதாகமத்தில் மல்கியா 4-ல் கடைசி நாட்களில் நமக்கு அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருப்பதைக் காண்கி றோம். இப்போது, அவர் தனது தீர்க்கதரி சிகளைக் கழுகுகளுக்கு ஒப்பிடுகிறார். அவர் தன்னை ஒரு கழுகு என்று அழைக்கிறார். அவர் பெரிய யேகோவா கழுகு. 60 அவர் தனக்கென ஒரு மணவாட்டியைச் சம்பாதித்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார். கடைசி நாட்களில், ஒரு ஊழியத்துடன் ஒரு மணவாட்டியைப் பெறப்போகிறார், அது மிகத் துல்லியமாக... ஒரு கணவனும் மனைவியும் ஒன்றாவது போல. யேகோவா தனது ஜனங் களைத் தன்னைப் போலவே பெறும்போது, அவர் தனது ஜனங்களுக்குள் வாழ்கிறார். அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். 61 யோவான் 14:12-ல் அவர் சொன்னதை இது சரியாக நிறைவேற்றுகிறது, "நான் செய்கிற கிரியைகளை என்னை விசுவாசிக்கிறவனும் செய்வான்." இயேசு சம்பவிக்கும் என்று சொன்னதையும் இது நிறைவேற்றுகிறது, "சோதோமின் நாட்களில் நடந்தது போலவே, மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்." 62 இப்போது விண்வெளி வீரர் காலம். குதிரை சவாரி செய்பவரோ, ஆட்டோ மொபைலோ அல்லது விமானங்களோ பார்க்காத காரியங்களை விண்வெளி வீரர் பார்க்கிறான். அவன் இன்னும் உயரே செல்கிறான். விமானம் இன்னும் இங்கே கீழே மேகங்களுக்குள் தடுமாறிக் கொண்டிருக்கிறது, பழுதுகளும், மோதல்களும், மற்றெல்லாவற்றையும் கொண்டி ருக்கிறது. ஆனால் அவன் சமயக் கோட்பாடுகள் மற்றும் சபைப்பிரிவுகளின் மேகங்களுக்கு அப்பால், எல்லாவற்றிலிருந்தும் வெகு தொலைவில் உன்னதங்களுக்குள் மேலே செல்கிறான். 63 விண்வெளி வீரர் காலம், நாம் விண்வெளி வீரர் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அங்கே நடந்த இயற்கை நிகழ்வுகளின் மூலம் தேவன் சாட்சியளித்தது எவ்வளவு உறுதியோ, அப்படியே நாம் ஒரு விண்வெளி வீரரைச் சாதித்திருக்கிறோம் என்றால், மல்கியா 4-ன் படி கடைசி நாட்களில் தேவன் எதைச் சாதிப்பதாக வாக்குத்தத்தம் செய்தாரோ அதைச் சாதித்திருக்கிறார் என்றும் அவர் இப்போது சாட்சியளிக்கிறார். விமானங்கள் மற்றும் ஆட்டோமொபைல்கள் மற்றும் இன்னும் எவையெல்லாம் உண்டோ அவற்றிலிருந்து துண்டித்துக்கொள்ளக்கூடிய ஒருவரைத் தன் கைகளில் பெறுவது மட்டுமே அவர் செய்ய வேண்டிய ஒரே காரியம். அது என்னவாக இருந்தது என்று பின்னோக்கிப் பார்ப்பதல்ல, ஆனால் அவனை இன்னும் உயரே தூக்குவதற்கு, தேவனுடைய பிரசன்னத்திற்குள் அவனைத் தூக்குவதற்கு, எல்லாமே சாத்தியமாகிற அந்த இடத்திற்கு அவனைத் தூக்குவதற்கு அதிக வல்லமை. இப்போது அது நடப்பதை நாம் பார்க்கிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. 64 இயற்கையான விண்வெளி வீரர் விமானங்களுக்கு மேலே செல்வது போலவே, ஆவிக்குரிய விண்வெளி வீரரும் செல்கிறான்; விமானங்கள் எப்போதும் விபத்துக்குள் ளாகின்றன, மேகங்களுக்குள் சச்சரவு செய்கி ன்றன, அதுபோன்ற எல்லாம். விண்வெளி வீரரை விடப் பெரியது எதுவும் இருக்க முடியாது, வேறு எந்தச் சாதனையும் இருக்க முடியாது. அவன் செய்ய வேண்டியதெல்லாம் அதிக சக்தியைச் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும், அவன் விரும்பும் எந்த இடத்திற்கும் அவன் செல்வான், பாருங்கள், ஏனென்றால் அவன் விண்வெளிக்குள் சென்றுவிட்டான். விமானங்கள் இன்னும் கீழே இருக்கின்றன, விபத்துக்குள்ளாகின்றன, சச்சரவு செய்கின்றன, தரையிறக்கப்படுகின்றன, அது போன்ற எல்லாம். ஆனால் விண்வெளி வீரர் தரையிறக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அவன் மேகங்களுக்கு மேலே செல்கிறான். அவன் மேலே செல்கிறான், சமயக் கோட்பாட்டிற்கு மேலே, சபைப்பிரிவிற்கு மேலே, "அது அப்படியல்ல, அது அப்படியல்ல!" என்று சொல்பவர்களுக்கு மேலே. அவனுக்கு ஒரு வழிகாட்டி இருக்கிறார், பரிசுத்த ஆவியானவர். வார்த்தை அவனுக்கு அப்படிச் சொல்கிறது, அவன் தொடர்ந்து செல்கிறான்! 65 ஒரு விஞ்ஞானி எப்படி ஒரு விண்வெளி வீரனை உருவாக்குகிறார்? தங்களிடம் உள்ள சக்தியை எடுத்துக்கொண்டு, அதற்குள் எதையாவது உடைத்துக் கொண்டே இருக்கிறார், அது அதை வெகுதூரம் செல்ல வைக்கும், காற்று இல்லாமலும் செல்ல வைக்கும், மேலும் பல. அவர் தொடர்ந்து... அதன் இரசாயனங்கள் எனக்குத் தெரியாது; நான் ஒரு மெக்கானிக் இல்லை. ஆனால் அது எதுவாக இருந்தாலும், அவர் அதை மேலும் மேலும் உயரே செல்ல வைக்கிறார். அவர் அதை எல்லா நேரத்திலும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார், இப்போது அது எந்தக் காரணத்திற்கும் அப்பாற்பட்டுச் செல்ல முடியும். அப்படியே தேவனுடைய விண்வெளி வீரரும் செய்கிறான், எல்லா சபை சமயக் கோட்பாடுகளுக்கும், எல்லா எல்லைகளுக்கும், "அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன; அப்படி எதுவும் இல்லை," என்று சொல்லும் எல்லாவற்றிற்கும் அப்பால் செல்கிறான். 66 விண்வெளி வீரர் இதை எப்படிக் கண்டுபிடித்தார்? அவர் அதைத் தாளில் கணக்கிட்டார். அவர் எதைக் கணக்கிட்டாரோ அது தாளில் இருந்து வந்தது. அதே காரியம், எந்தவொரு மனிதனும் உட்கார்ந்து தேவனுடைய வார்த்தையை வாசித்து, என்ன வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிறது என்ப தைப் பார்க்க முடியும். "வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, அவைகளே என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகள்" என்று இயேசு சொன்னார். அக்காலத்தில் அங்கே இருந்த அந்தப் பூமிக்குரிய கூட்டம் அவர் யாரென்று அறியவில்லை. 67 ஊழியம், அது என்ன செய்கிறது, விண்வெளி வீரர் காரியங்களைப் பார்க்கிறான், விமானங்கள் மற்றும் அனைத்தும் காலா வதியாகிவிட்டன என்று. ஆவிக்குரிய விண்வெளி வீரரும் அப்படியே, மேகங்களுக்கு அப்பாலும், சமயக் கோட்பாடுகளுக்கு அப்பாலும், சந்தேகத்திற்கு அப்பாலும், விண் வெளிக்கு வெளியே செல்கிறான்; எல்லா அவிசுவாசத்திற்கும் வெளியே உள்ள விண்வெளி, "உன்னால் அதைச் செய்ய முடியாது. யாரும் உன்னுடன் ஒத்துழைக்க மாட் டார்கள், ஒத்துழைக்க மாட்டார்கள். உன்னால் இதைச் செய்ய முடியாது. உன்னால் அதைச் செய்ய முடியாது," என்று சொல்லும் கூச்சலை அவன் கேட்காத வெளி விண்வெளி. அவன் அதைக் கவனிப்பதில்லை. அவன் ஒரு விண்வெளி வீரர். அவன் அந்த மேகங்களுக்கு அப்பால் செல்கிறான். "இது மிகவும் புயலாக இருக்கிறது. நம்மால் முடியாது." ஒரு விண்வெளி வீரருக்கு அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது; அவன் புயலுக்கு அப்பால் செல்கிறான். பாருங்கள், இன்றைய ஒரு உண்மையான விண்வெளி வீர விசுவாசத்திற்கு அது அப்படித்தான் இருக்கிறது. அவர்கள் சொல்கிறார்கள், "டாக்டர் இன்னின்னது சொன்னார்." அது சரியாக இருக்கலாம், ஆனால் ஒரு விண்வெளி வீரர் அதை நம்புவதில்லை. 68 அது இங்கே எழுதப்பட்டிருக்கும் போது, அவன் அதைத் தன் இருதயத்தில் பெற்றிருக்கிறான். ஏதோ ஒன்று அவனுக்குச் சொல்கிறது, அவன் அப்படியே வெளியே உந்தப்பட்டுச் செல்கிறான். அவ்வளவுதான். விண்வெளிக்குள் நேராகச் செல்கிறான், ஏனென்றால் நாம் ஒரு விண்வெளி வீரர் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஆம் ஐயா, விண்வெளியில், "விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்" என்ற இடத்தில். அவனுக்கு ஒரு வழிகாட்டி இருக்கிறார், அது அவருடைய வார்த்தை, அது அவனுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று சொல்கிறது, தேவனுடைய வார்த்தை. 69 இயற்கையான விண்வெளி வீரருக்கு... அவனைக் கட்டுப்படுத்த ஏதோ ஒன்று இருக்கிறது. விண்வெளி வீரர் காற்றில் இருக்கும்போது, ​​இங்கே பின்னோக்கி, இங்கே பூமியில் கீழே அவனைக் கட்டுப்படுத்தும் ஏதோ ஒன்று இருக்கிறது. அது ரேடார் என்று அழைக்கப்படுகிறது. அந்த ரேடார் அவனைச் சுற்றிலும் நகர்த்துகிறது, அவன் எங்கே இருக்கிறான் என்பதைக் காட்டுகிறது, அவன் என்ன செய்கிறான் என்று சொல்கிறது. அந்த ரேடார் பூமியில் உள்ள ஒரு ரேடார் கோபுரத்திலிருந்து அவனைக் கட்டுப்படுத்துகிறது. அதுதான் இயற்கையான விண்வெளி வீரர். 70 எனவே ஆவிக்குரிய விண்வெளி வீரருக்கும் ஒரு கட்டுப்பாட்டு வல்லமை இருக்கிறது, ஒரு கட்டுப்பாட்டுக் கோபுரம் இருக்கிறது. அது மனிதன் இருப்பதைப் போல இங்கே கீழே இல்லை. அது அங்கே மேலே இருக்கிறது. அவனுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவரே அவனைக் கட்டுப்படுத்துகிறார், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்ற ஒரு கோபுரம். அது கட்டுப்பாட்டில் இருக்கிறது, வார்த்தையினால் அவனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது; ஏதோவொரு மதவெறிக் கூட்டத்திலோ, ஏதோ ஆர்ப்பாட்டமான அபத்தத்திலோ அல்ல; ஆனால், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதில், அது நடக்கிறது. அது எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவனுக்கு ஒரு கட்டுப்பாட்டுக் கோபுரம் இருக்கிறது, அதுதான் பரிசுத்த ஆவி. வார்த்தை அவருடைய திட்டமாக இருக்கிறது, அவன் அந்தத் திட்டத்திற்குள் சரியாகப் பொருந்துகிறான். பரிசுத்த ஆவியின் வல்லமை அவனை வெளியே நகரச் செய்து, தேவன் தனது மக்களுக்காகச் சாதிக்க விரும்பும் சாதனையை அது கொண்டு வருகிறது, அது அவர் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்றும்படிக்கு. 71 இயேசு மக்களைக் குணமாக்க வேண்டும் என்பதற்காகக் குணமாக்கவில்லை. அவர் அதை நிறைவாக்கினார், வேதவசனத்தை நிறைவேற் றினார். அவர் அதைச் செய்வார் என்று எழுதப்பட்டிருந்ததால் அவர் குணமாக்கினார். இன்று இந்த அடையாளங்களை அவர் காட்ட வேண்டியதில்லை, அவருக்கு இப்படிப் பட்ட ஊழியம் இருக்க வேண்டியதில்லை, ஆனால் அவர் அதைச் செய்வேன் என்று வாக்குத்தத்தம் செய்தார். அவர் தனது வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற அதைச் செய்கிறார். 72 சகோதரனே, சகோதரியே, ஆண்களே, பெண்களே, உங்களால் அதைப் பார்க்க முடியவில்லையா? ஆவிக்குரிய மற்றும் இயற்கையான நிழலாட்டத்தை உங்களால் பார்க்க முடியவில்லையா? 73 இந்தச் சிறந்த சாதனைகள் அறிவியலின் காலக்கடிகாரத்தைக் கொண்டு வந்தன, அது இப்போது அது மட்டுமே என்று சொல்லும் அளவுக்கு ஒரு இடத்திற்கு வந்துவிட்டது... அறிவியலின் கடிகாரத்தில், நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் முடிவில் இருக்கிறார்கள். அவர்களை அழிக்கும் ஒன்றை அவர்கள் கண்டு பிடித்துவிட்டார்கள். அவர்கள் எல்லாவற்றையும் கண்டு பிடித்துவிட்டார்கள். ஒரு விண்வெளி வீரர் காற்றில் ஏறி, அணுகுண்டு சக்திகளுடன் மேலே சென்று, அங்கே உட்கார்ந்துகொண்டு, "சரணடையுங்கள் அல்லது வெடித்துச் சிதறுங்கள்," என்று சொல்ல முடியும். நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள்! தேவன் செய்தவற்றின் மீது அவர்கள் வேலை செய்திருக்கிறார்கள். அவர்களால் திரிக்க முடிந்திருக்கிறது. உயிரைக் கொடுக்க முயற்சிப் பதற்குப் பதிலாக, யாரையாவது கொல்லக்கூடிய ஒன்றை, அடுத்ததை விஞ்சக்கூடிய ஒன்றை, அடுத்த தேசத்தை முறியடிக்க, அடுத்த இடத்தை முறியடிக்கக் கூடிய ஒன்றைக் கண்டுபிடிக்கவே அவர்கள் எப்போதும் முயற்சிக்கிறார்கள். அதைத்தான் அவர்கள் செய்ய முயற்சிக்கிறார்கள். 74 ஆனால் மனிதன், மனிதனைத் தன் சகோதரன் என்று அழைத்து, அவன் சாகத் தேவையில்லாத ஒரு வீட்டிற்கு அவனை வழிநடத்த முயற்சிக்கிறான். ஒன்று மரணத்தில் இருக்கிறது, மற்றொன்று ஜீவனில் இருக்கிறது. ஆனால் மரணத்தில் உள்ள இவை, ஜீவனைப் பிரதிபலிக்கின்றன. ஒரு மரத்திலிருந்து இலை உதிர்ந்து மரிக்கும் போது, அது மீண்டும் வரப்போகிறது என்றுதான் அர்த்தம், ஏனென்றால் அது இருந்திருக்கிறது. 75 இன்றைய அறிவியலின் சாதனையின்படி, கடிகாரம் நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் என்று துடிக்கிறது. தேவனுடைய பெரிய கடிகாரத்தில், "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்" என்று அது துடிக்கிறது. நாம் வந்துவிட்டோம்! "நான் செய்யும் கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்." "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்." அழிவுக்கு மூன்று நிமிடங்கள் என்று விஞ்ஞானக் கடிகாரம் சொல்லும்போது; தேவனுடைய கடிகாரம், "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்," என்று சொல்கிறது. அவர் தனது வார்த்தையை வாழ வைக்கவும், அது என்ன செய்யும் என்று வாக்குத்தத்தம் செய்ததோ அதைச் சரியாகத் தன் சபைக்குச் செய்யவும், தனது விண்வெளி வீரர்களை நிரப்பி, அவர்கள் அனைவரையும் எரிபொருள் நிரப்பித் தயாராக வைத்திருக்கவும் பரிசுத்த ஆவியின் வல்லமையில் பூமியில் இருக்கிறார். 76 ஆகவே அவர்கள் தங்கள் பெரிய விஞ்ஞானக் குழாயில், சிறிது காலத்திற்கு முன்பு, விண்வெளி வீரக் குழாயில் ஏறினார்கள், இப்போது கவுண்டவுனை (countdown) எடுத்துக்கொண்டு, நிலவை நோக்கிச் செல்கிறார்கள். அவர்களும் இங்கிருந்து கிளம்புகிறார்கள். அவர்கள் ஒரு பெரிய குழாயில் ஒரு விண்வெளி வீரரை வைத்திருக்கிறார்கள், அணுகுண்டு சக்தியால் இயக்கப்படுகிறது, அதை அவர்கள் நிலவு வரை அனுப்ப முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் தங்கள் குழாயில் ஏறி கவுண்டவுனுக்காகக் காத்திருக்கிறார்கள். 77 ஆவிக்குரிய விண்வெளி வீரர் கிறிஸ்துவுக்குள் ஏறி, வார்த்தையின் கவுண் டவுனைக் கேட்டுக்கொண்டிருக்கிறான். ஆமென். இப்போது நீங்கள் லூத்தரன்களும், பாப்டிஸ்டுகளும், பிரஸ்பிடீரியன்களும் சத்தமிட வேண்டும். வார்த்தையின் கவுண்டவுனைக் கவனியுங்கள். ஓ! வார்த்தையின் கவுண்டவுன்! அவர்கள் நிலவுக்கு அல்ல, பரலோகத்தை நோக்கிச் செல்கிறார்கள். அவர்கள் நிலவை எவ்வளவு வேகமாகத் தாண்டிச் செல்வார்கள் என்றால், அவர்கள் அதைப் பார்க்கக்கூட மாட்டார்கள். ஓ! கவுண்டவுனுக்காகக் காத்திருக் கிறார்கள்! ஆம், ஐயா. கவுண்டவுனுக்காகக் காத்திருப்பது சரியே. 78 அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் கிறிஸ்துவுக்குள், எடுத்துக் கொள்ளப்படும் கிருபையில் சுற்றப்பட்டி ருக்கிறார்கள். அவர்கள் தாங்களாகச் செய்தது ஒன்றுமில்லை. கிறிஸ்து உலகத்தின் பைத்தியமா னவைகளை, கல்வியறிவற்றவர்களை எடுத்துக் கொண்டார், தனது விண்வெளி வீரர்களை அதில் சுற்றி, அவர்கள் புறப்படுவதற்குப் பரிசுத்த ஆவியினால் அவர்களைப் பலப்படுத்தினார். இந்த உலகம் தனியாக விடப்படப் போகிறது. அது சரியே, புறப்படுகிறார்கள்! 79 கவனியுங்கள், சுபாவ மனிதன் பின்னோக்கி எண்ணுகிறான். அவன் காரியங்களைப் பின்னோக்கிச் செய்தான் என்று நான் சொன்னேன். அவன் பின்னோக்கி எண்ணுகிறான். அவனது எண்ணிக்கையைக் கவனியுங்கள், "பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று, பூஜ்ஜியம்!" பாருங்கள், அவன் பின்னோக்கிச் சென்று, எண்ணத் தொடங்குகிறான். பாருங்கள்? அவனது... பத்து ஒரு மோசமான எண். அது சரியே. பத்தில் தொடங்குவது, அது ஒரு மோசமான எண். 80 இஸ்ரவேலின் பத்துக் கோத்திரங்கள் இருந்தன, அவர்கள் அனைவரும் மாம்சத்திற் குரியவர்களாக இருந்தார்கள். அவர் யோசேப் பின் இரண்டு மகன்களான எப்பிராயீம் மற்றும் மனாசேயை, தீர்க்கதரிசியின் பிள்ளைகளை எடுத்து, அவர்களை ஆசீர்வதிக்க வேண்டி யிருந்தது. அவர் அப்படிச் செய்தபோது, ​​அவரு டைய கைகள் குறுக்காக மாறின. அவன் சொன்னான், "தகப்பனே, அப்படியல்ல, நீர் எப்பிராயீம் மேல் கையை வைத்திருக்கிறீர், அது மனாசேயின் மேல் இருக்க வேண்டும்." 81 அவர் சொன்னார், "தேவன் என் கைகளை மாற்றினார்." அதிலிருந்து... மூத்த மகனிடமிருந்து, நியாயப்பிரமாணத்திலிருந்து அதை எடுத்து, கிறிஸ்துவுக்கு மேல் வைப்பது. அதன் மூலம், சிலுவையின் மூலம் சேஷ்டபுத்திரபாகம் இளைய மகனுக்கு மாறியது, ஆமென். ஓ! எவ்வளவு அற்புதமானது! அதற்குள் செல்ல நமக்கு நேரம் இருந்திருந்தால்; வேறொரு முறை பார்க்கலாம். சரி. 82 இப்போது, ​​பத்து ஒரு மோசமான எண். ஆனால் மனிதன் எப்போதும் பின்னோக்கி எண்ணுகிறான், பத்தில் தொடங்குகிறான். "பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று, பூஜ்ஜியம்." 83 தேவன் என்ன செய்கிறார்? அவர் தனது எண்ணான, ஏழில் தொடங்குகிறார். அது தேவனுடைய எண். அவரைப் பாருங்கள், ஏழு. ஓ, அவர் ஒன்றிலிருந்து தொடங்கி, முன்னோக்கி எண்ணுகிறார். அவர் தனது முதல் சபைக்காலத்திலிருந்து தொடங்குகிறார். பூமியில் அவருடைய அடையாளங்கள் அதுதான். ஏழு சபைக்காலங்கள் இருக்கின்றன. அவர் ஏழு நாட்களில் உலகத்தைப் படைத்தார்; ஏழாம் நாளில் அவர் ஓய்ந்திருந்தார். அது அவருடைய படைப்பில் அவருடைய கடைசி எண். அவர் ஓய்ந்திருந்தார். 84 கவனியுங்கள், அவர் பின்னோக்கி அல்ல, நேராக முன்னோக்கி எண்ணுகிறார். அவர் முன்னோக்கிச் செல்கிறார். அவர் கி.பி. 33-ல் தொடங்கிய தனது முதல் சபைக்காலத்திலிருந்து தொடங்குகிறார், அவர் கவுண்டவுனைத் தொடங்கினார். அவர் தனது சபைக்காலங்களை எண்ணினார். அது பெந்தெகொஸ்தே நாளில் சபையின் பிறப்பாக இருந்தது. என்ன... அவர் எண்ணத் தொடங்குகிறார். அவர் சபைக்காலங்களை எண்ணத் தொடங்குகிறார். "முதலாவது, எபேசு, எண் ஒன்று; இரண்டு, சிமிர்னா; மூன்று, பெர்கமு; நான்கு, தியத்திரா; ஐந்து, சர்தை; ஆறு, பிலதெல்பியா; ஏழு, லவோதிக்கேயா." நீங்கள் நினைப்பதை விடக் காலம் பிந்திவிட்டது. நீங்கள் நினைப்பதை விடக் காலம் பிந்திவிட்டது. எண்ணிக்கை முடிந்துவிட்டது. அடுத்தது "பூஜ்ஜியம்," போகலாம். எல்லாம் தயாராக இருக்கிறது. எண்ணிக்கை முடிந்துவிட்டது. 85 நமது விண்வெளி வீரரான ஜான் கிளென் (John Glenn), புறப்படுவதற்காக அந்தப் பெரிய குழாயில் ஏறியபோது, ​​தேசம் பேச்சற்று நின்றது. அன்று காலையில் அவர் புறப்பட்டது அவர்களுக்குத் தெரியாது. அவர் புறப் பட்டபோது, அவர் குழாயில் ஏறினார், எல்லோரும் அழுது கொண்டும், என்ன நடக்கப் போகிறது என்று காத்துக்கொண்டும், பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். தேசம் மெய்மறந்து நின்றது. நீங்கள் பார்த்தீர்கள்... எல்லோரும் அதைப் பார்க்க வேண்டும் என்பதற்காக எல்லா தொலைக்காட்சிகளும் அலறிக் கொண்டிருந்தன, எல்லாம் அப்படி இருந்தன. அங்கே இயற்கையான கண்ணால் அதைப் பார்க்க முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் அதைத் தொலைக்காட்சியில் போட்டார்கள். உங்களுக்கு அது நினைவிருக்கும். 86 பின்னர் அவர் குழாயில் சரியாக அமர்த்தப்பட்டபோது, அவர்கள் தொடங்கி னார்கள், "பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று, பூஜ்ஜியம்," அவர் சென்றுவிட்டார். என்ன நடந்தது? பெரிய நெம்புகோல் இழுக்கப் பட்டபோது, ​​அணுசக்திகள் தீப்பற்றத் தொடங்கின, உடையத் தொடங்கின, நெருப்பு பறக்கத் தொடங்கியது, புகை எழும்பத் தொடங்கியது, அந்தப் பெரிய குழாய் காற்றுக்குள், அறியப்படாத இடத்திற்குள், எங்கேயோ வெளியே புறப்பட்டது. மனிதனின் சாதனையில், அவன் இதுவரை கண்டிராத மிகப்பெரிய சாதனையில் அவர் புறப்பட்டார். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், அது மிகச் சிறிய விஷயம். 87 ஒரு நாள் காலையில், தேவனுடைய சாதனை, இயேசு கிறிஸ்துவுக்குள் ஏறி, பரிசுத்த ஆவியினால் அங்கே பிறந்து, அவருடைய வல்லமையால் நிரப்பப்பட்ட அவருடைய விண்வெளி வீரர்கள்! ஒரு நாள் காலையில், தாங்கள் அதைத் தவறவிட்டதைக் காணும்போது, ​​முழு பிரபஞ்சமும் அலறி, அழுது, பற்கடிப்பது உண்டாயிருக்கும். பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் இயக்கப்பட்ட அந்தப் பெரிய கழுகு, தன் சிறகுகளை விரிக்கத் தொடங்கும்போது, ​​மணவாளனைச் சந்திக்கச் செல்ல விண்வெளி வீரர்கள் வானத்திற்குள் எழும்புவார்கள்; பரிசுத்த ஆவி வடிவில் இயேசு கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பிய சர்வவல்லமையுள்ள தேவனுடைய விண்வெளி வீர வல்லமையில், இந்தச் சாதனைகள் மூலம் சபையைக் கொண்டு வந்திருக்கும்போது, மணவாட்டி மேலே எழும்புகிறாள்! 88 இப்போது, ​​உலகத்தின் காரியங்களுக்கு அப்பால் பறக்கவும், இங்கே சபையில் அவரைக் காணவும், தன்னை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக வெளிப்படுத்தவும் அவளுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை கிடைக்கும் வரை. ஆம், ஐயா. கவுண்டவுன் கூட முடிந்துவிட்டது. ஒவ்வொரு சபைக்காலமும் கடந்துவிட்டது. நாம் லவோதிக்கேயாவில் முடித்துக் கொண்டி ருக்கிறோம். 89 உள்ளே வாருங்கள், என் சகோதரனே, சகோதரியே. அழுத்தத்தைப் பெறுங்கள் (Get pressurized). நீங்கள் உள்ளே வந்து அழுத்தம் பெறும்போது அந்த அழுத்தம் உங்களைப் பாதிக்காது. கிறிஸ்துவுக்குள் வாருங்கள், உலகம் என்ன சொன்னாலும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். அவர்களால் உங்களை ஒருபோதும் தாக்க முடியாது. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். நீங்கள் உள்ளே வைக்கப் பட்டிருக்கிறீர்கள். 90 இயேசு கிறிஸ்துவே நமது மாபெரும், மகிமையான விண்வெளி வீரக் குழாய், நாம் அவருக்குள் இருப்போம், ஒரு நாள் காலையில் அவள் வெளியே பறக்கத் தொடங்கும்போது, ​​பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அக்கினியினாலும் உந்தப்படுவாள். பரிசுத்த ஆவி அக்கினி அப்படிப் பூமியைத் தாக்கும், அவர்கள் அப்படிச் செய்யும் போது, ​​சபை மேலே தூக்கப்படும். மேலும் எல்லாத் தேசங்களும் நிற்கும், அவர்களுக்குத் தொலைக்காட்சி தேவைப்படாது, அவர்கள் அவரைப் பார்ப்பார்கள். முழங்கால் யாவும் முடங்கும், நாவு யாவும் அறிக்கையிடும், அவள் அங்கே மகிமையான பரலோக மண்டலங்களுக்குள், தன் மணவா ளனுடன் மணம் புரியத் தன் வழியை உந்திச் செல்லும்போது. அந்த நாளுக்காக வாழத் தேவன் நமக்கு உதவுவாராக! நாம் தலைவணங்குவோம். 91 இன்று நீங்கள் குதிரை வண்டியை ஓட்டுகிறீர்களா, சைக்கிள் ஓட்டுகிறீர்களா, நீங்கள்... ஒரு ஆட்டோமொபைல், அல்லது விமானத்தில் மேகங்களுக்குள் சென்று விட்டீர்களா? நீங்கள் சென்றிருந்தால், நான் உங்களுக்குச் சொல்ல ஒன்று இருக்கிறது. இப்போது ஒரு விண்வெளி வீரர் காலம் இருக்கிறது. நீங்கள் ஏன் வந்து விண்வெளி வீரருக்குள் வரக்கூடாது? ஓ, இது பயமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். விமானத்தில் ஏறிய முதல் மனிதன், பயந்து சாகும் நிலையில் இருந்தான்; முதன்முதலில் ஆட்டோமொபைல் வைத்தி ருந்தவர், அது என்ன செய்தது என்று உங்களுக்குத் தெரியும்; ஆனால் இப்போது அது சாதாரண விஷயம். ஓ, சகோதரனே, சகோதரியே. இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார், நாம் உள்ளே இருக்க வேண்டிய பெரிய விண்வெளி வீரக் குழாய். நமக்கு மேலிருக்கும் மேகம், ஒரு பொருட்டல்ல; அவர் சந்தேகத்தின் ஒவ்வொரு மேகத்தையும், அவிசுவாசத்தின் ஒவ்வொரு மேகத்தையும் உடைத்து, அங்கே விண் வெளிக்குள் பாய்ந்து செல்வார். 92 நீங்கள் இன்னும் அவருக்குள் வரவில்லை என்றால், இன்று மதியம் உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. உங்கள் கைகளை உயர்த்தி, "சகோதரர் பிரான்ஹாம், தேவன் வாக்குத்தத்தம் செய்த ஒவ்வொரு வார்த்தையையும் நான் பார்க்கக்கூடிய, எனக்குள் இருக்கும் தேவனுடைய துடிக்கும் வல்லமையை நான் பார்க்கவும் உணரவும் முடிகிற, என்... இந்த உலகம் மற்றும் காரியங்கள் என்னை விட்டு அகன்றுவிட்டன என்று நான் அறியக்கூடிய அந்த இடத்திற்குள் நான் நடக்கும்படி எனக்காக ஜெபியுங்கள்," என்று சொல்வீர்களா? தேவன் ஆசீர்வதிப்பாராக. கைகளைப் பாருங்கள். ஆ, ஓ, ஆ! எல்லா இடங்களிலும். 93 எங்கள் பரலோக பிதாவே, நீர் அவர்கள் கைகளைப் பார்க்கிறீர். வார்த்தையைப் பிரசங்கிப்பதற்கு மட்டுமே நான் பொறுப்பு. நீர், அவர்கள் உம்முடையவர்கள். நான் அவர்களை உம்மிடம் கொடுக்கிறேன். அவர்கள் உம்முடையவர்கள். பரிசுத்த ஆவியானவர் இப்போது... 94 அவர்கள் அதைப் பார்க்கட்டும், இந்தச் சாதனைகளை. அவர்கள் அதை இயற்கையில் பார்க்கிறார்கள்; நாம் பின்னோக்கிப் பார்த்தால், அதை ஆவிக்குரிய ரீதியில் பார்க்கிறோம். நீர் இங்கே இருக்கிறீர், ஆண்டவரே. முடிவு காலம் வருவதற்கு முன்பாக, சோதோம் மற்றும் கொமோராவின் நாட்களில் இருந்தது போலவே இருக்கும் என்று நீர் வாக்குத்தத்தம் செய்தீர். நாம் பின்னோக்கிப் பார்த்து அந்த நாட்களைக் காண்போம், ஆபிரகாமின் நாட்களில் சிறந்த, தேவதூதத் தன்மையுள்ள, அபிஷேகம் பெற்ற இரண்டு ஊழியர்கள் சோதோமுக்குச் சென்று, லோத்தை வெளியே அழைத்துப் பிரசங்கித்ததைப் பாருங்கள். பின்னர் ஆபிரகாமுடன் ஒருவர் தங்கியிருந்தார், அவர்தான் ஆபிரகாமுக்கு ஒரு அடையாளத்தைச் செய்தார். சோதோமில் இருந்த மற்றவர்கள் தங்கள் அடையாளத்தைச் செய்தார்கள். 95 பிதாவே, இங்கே பல காரியங்களைச் சொல்ல முடியும், ஒருவேளை சபைக்குப் புரியாமல் போகலாம். ஆனால், ஆண்டவரே, நாங்கள் முடிவு காலத்தில், விண்வெளி வீரர் காலத்தில் இருக்கிறோம் என்பதை அவர்கள் வந்து பார்க்கும்படி, நீர் அவர்களுக்கு ஒரு ஏக்கத்தைக் கொடுக்கும்படி நான் ஜெபிக்கிறேன். பிதாவே, அவர்கள் வைத்திருந்ததைக் கண்டிக்க முயற்சிக்கவில்லை, அவர்களுக்கு இன்னும் அதிகமாக, எடுத்துக்கொள்ளப்படும் கிருபையைக் கொடுக்கவே முயற்சிக்கிறது என்பதை அவர்கள் உணரும்படி நான் ஜெபிக்கிறேன், ஏனென்றால் நமக்கு எடுத்துக் கொள்ளப்படும் வல்லமை தேவைப்படும் நேரம் வரும்; சரீரத்தைக் குணமாக்குவதற்கு மட்டுமல்ல, ஒரு இமைப்பொழுதில் அதை மாற்றுவதற்கும். கிறிஸ்து அவர்களுடைய சரீரங்களில் எவ்வளவு உண்மையாக இருப்பார் என்றால், அவர் தனது பெரிய மரணத்தினாலும் அவர் சம்பாதித்ததாலும் அதை மாற்ற முடியும். நான் நேற்றிரவு பேசிய அந்த அடையாளத்தை (Token) அவர்கள் இன்று எடுத்துக்கொண்டு, அதைத் தங்களுக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு, இந்த விண்வெளி வீரருக்குள் நடப்பார்களாக. (அருளும், பிதாவே), அங்கே தரிசனங்கள், வல்லமைகள் மற்றும் அறியப்பட்டவற்றுக்கு அப்பால் உள்ள உலகங்கள், மற்றும், ஓ தேவனே, அந்த ஏழு முத்திரைகளில் உள்ள தேவனுடைய அனைத்து பெரிய இரகசி யங்களும் வெளிப்படுத்தப்பட்டு மனிதனுக்குத் தெரியப்படுத்தப்படுகின்றன. அருளும், பிதாவே. 96 இப்போது அவர்கள் உம்முடையவர்கள். பலிபீட அழைப்புகளைத் தான் நாங்கள் செய்கிறோம் என்பதை நான் உணர்கிறேன், ஆனால், ஆண்டவரே, "விசுவாசித்தவர்கள் எத்தனை பேரோ அத்தனை பேரும்," என்று நீர் சொன்னீர். விசுவாசிக்க, நீர் அவர்களுக்கு விசுவாசத்தைக் கொடுக்கும்படி நான் ஜெபிக்கிறேன். ஆண்டவரே, அவர்கள் உம் கைகளில் இருக்கிறார்கள். நான் பார்க்காவிட்டாலும், நாங்கள் உம் பக்கத்தில் சந்திக்கும் வரை அவர்கள் என்னை இனி பார்க்காவிட்டாலும், நாங்கள் அறியப்பட்டிருக்கிறது போலவே அப்பொழுது அறிந்துகொள்வோம். நீர் அவர்களுக்கு உதவும் படி நான் ஜெபிக்கிறேன். நாம் அனைவரும் அங்கே, பாதுகாப்பாக, இயேசு கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள நமது சிறந்த விண்வெளி வீர விசுவாசத்தின் அற்புதமான கிருபையினால் கொண்டு செல்லப்பட்டு, அங்கே நாம் அவருடன் குடிகொண்டிருப்போம். ஆமென். 97 இப்போது, ​​ஒரு கணம், நாம் நோயாளிகளுக்காக ஜெபிக்கப் போகிறோம். தேவனே, நாங்கள் அதைச் செய்வதாக வாக்குத்தத்தம் செய்தோம். நாங்கள் அதைச் செய்ய விரும்புகிறோம். இப்போது நான் இதைச் சொல்ல விரும்புகிறேன், வாரம் முழுவதும்... இப்போது நமக்கு இன்னும் பதினைந்து, இருபது நிமிடங்கள் இருக்கின்றன. நான் சிறிது நேரத்தைக் குறைத்துவிட்டேன், அதனால் இதைச் செய்ய இன்னும் எனக்கு பதினைந்து, இருபது நிமிடங்கள் உள்ளன. 98 இப்போது, ​​முதல் விஷயம், நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்தக் காரியங்கள், இவை உண்மையா இல்லையா? வேதாகமம் அதை வாக்குத்தத்தம் செய்தது என்று நமக்குத் தெரியும், ஆனால் அவர் இங்கே இருக்கிறாரா? அவர் செய்வேன் என்று வாக்குத்தத்தம் செய்ததைச் செய்யத் தேவன் இங்கே இருக்கிறார். தேவன் இங்கே இருக்கிறார். பாருங்கள், நாம் பாஷைகளில் பேசுவதைத் தாண்டிச் சென்றுவிட்டோம். அது... அது சரியே, பாருங்கள். இந்தச் சிறிய விஷயங்களைத் தாண்டிச் சென்று விட்டோம். பாருங்கள், இப்போது நாம் விண்வெளி வீர விசுவாசத்தைப் பெற வேண்டிய ஒரு இடத்தில் இருக்கிறோம், அது விண்வெளி வீரர் வல்லமை, நாம் ஏற்கனவே கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம் என்பதை உணர, பாருங்கள், இன்னும் அதிகமாகக் கிறிஸ்து, நம்மை உன்னதங்களுக்குள் உயர்த்துவதற்கு. 99 நோயாளிகள் மேல் கைகளை வைத்து ஜெபிக்கும் பழைய முறை, அது நல்லது. அது லூதரின் நாட்கள், நண்பரே, ஆட்டோமொபைல் அல்லது அதுபோன்ற நாட்களில். இப்போது நாம் அதைத் தாண்டி இருக்கிறோம். 100 நினைவில் கொள்ளுங்கள், பழைய நாட்களில் இயேசு யூதர்களிடம் வந்தார், யவீரு (Jairus) சொன்னான், யவீரு சொன்னான், "நீர் வந்து என் மகளின் மேல் உம்முடைய கைகளை வையும், அவள் பிழைப்பாள்." ஆனால் ரோமன் சொன்னான், "நீர் வருவதற்கு நான் பாத்திரன் அல்ல, ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்." பாருங்கள்? அங்கீகரிப்பதற்கு... கிறிஸ்து எல்லாவற்றிற்கும் மேலானவர் என்ற அவரு டைய வல்லமையை அவன் அங்கீகரித்தான். 101 இப்போது, ​​கிறிஸ்து எல்லாவற்றிற்கும் மேலானவர் என்றால், அவர்-அவர் தன் வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும். அவரே ராஜா. அவரே தேவன். "நான் செய்யும் கிரியைகளை, நீங்களும் செய்வீர்கள்," என்ற தன் வார்த்தையை அவர் காப்பாற்ற வேண்டும். இப்போது, ​​யாரையாவது குணமாக்குவது என்றால், யாராலும் அதைச் செய்ய முடியாது, ஏனென்றால் அது ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது. அது ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது. அது அதன் அங்கீகாரம் மட்டுமே, பாருங்கள், அவர் நம் பிரசன்னத்தில் இருக்கிறார் என்ற அங்கீகாரம். அதை நீங்கள் நம்புகி றீர்களா? இப்போது சில நிமிடங்கள் ஜெபம் செய்யுங்கள், "தேவனே, இரக்கமாயிரும்," என்று சொல்லுங்கள். 102 பரலோக பிதாவே, மக்கள் அறிந்து கொள்ளும்படி; இங்கே அந்நியர்கள் இருக்கலாம், நான் பேசும் இது உண்மை என்று அவர்கள் அறிந்துகொள்ளும்படி. நான்-நான் என் எளிய, தாழ்மையான வழியில், ஆண்டவரே, எனக்குத் தெரிந்தவரை சுவிசேஷத்தை முன்வைக்க முயற்சிக்கிறேன். ஆண்டவரே, மக்கள் என் இலக்கணத்தைப் பொருட் படுத்தாமல், நான் என்ன சொல்ல முயற்சிக்கிறேன் என்பதை உணரும்படி செய்யும். இயேசுவின் நாமத்தில், தேவ மகிமைக்காக இதை நீர் உறுதிப்படுத்தி மெய்ப்பிக்கும்படி நான் ஜெபிக்கிறேன். ஆமென். 103 இப்போது, ​​நண்பர்களே, அநேகமாக இங்கே இருநூறு அல்லது முன்னூறு ஜெப அட்டைகள் இருக்கலாம். அவர்களை ஒவ்வொருவராக இங்கே மேலே கொண்டு வருவது எனக்குக் கடினமாக இருக்கும். அல்லது, அந்தப் பகுத்துணர்தலில் நான்கு அல்லது ஐந்து பேரைப் பார்த்த பிறகு, அநேகமாக நான் தரையில் படுத்திருப்பேன், அல்லது எனக்குத் தெரியாத அளவுக்கு பலவீனமாகி விடுவேன். ஒரு தரிசனம், நீங்கள் ஒரு தரிசனத்தைப் பார்க்கும்போது, ​​அது விளக்கப்படவும் வேண்டும், உங்களுக்குத் தெரியும். பல நேரங்களில் அது சரியாக இருப்பதில்லை, அது... 104 இப்போது அதை நீங்களே செய்யுங்கள், உங்கள் சொந்த விசுவாசமே அது. அந்தப் பெண்ணின் விசுவாசம் கர்த்தராகிய இயேசுவைத் தொட்டது, அவர்-அவர் தேவனுடைய குமாரன் என்று அவள் நம்பினாள். அது அவரிடமிருந்து அவளுக்கு வல்லமையை ஈர்த்தது, அவளுடைய விருப்பங்களைக் கொடுத்தது, அவர் திரும்பிப் பார்த்து அவளுடைய நிலைமை குணமானது என்று அவளிடம் சொன்னார். 105 பாருங்கள், "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது." இப்போது இங்கே அறிஞர்கள் அமர்ந்திருக்கிறார்கள், எனக்குத் தெரியும். அந்த வார்த்தை "சோஸோ" (sozo). "உம்முடைய வார்த்தை உன்னை இரட்சித்தது." "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது." உங்கள் விசுவாசம் உங்களைப் பாவத்திலிருந்து இரட்சிப்பது போல, உங்கள் விசுவாசம் உங்களைச் சரீரப்பிரகாரமாக, நோயிலிருந்து இரட்சிக்கிறது, பாருங்கள். இப்போது நீங்கள் அதை நம்ப வேண்டும். 106 இப்போது நான் அனைவரையும் மிகவும் அமைதியாகவும், சில நிமிடங்களுக்குப் பயபக்தியுடனும் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இப்போது பரிசுத்த ஆவியானவர், இந்தக் கூட்டத்தில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேராவது, இது தன்னிச்சையானது மற்றும் ஏதோ ஒன்று மட்டுமல்ல என்பதை நீங்கள் பார்க்கும்படி நான் கேட்கிறேன். பரிசுத்த ஆவியானவர் தன்னை வெளிப்படுத்த இங்கே இருக்கிறார். 107 இப்போது கூட்டத்தில் யாராவது. இப்போது, ​​எனக்கு ஒரு நபரைக் கூடத் தெரியாது, இங்கே அமர்ந்திருக்கும் எனக்கு அன்பான சகோதரி அப்ஷா (Upshaw) அவர்களைத் தவிர, இந்த நேரத்தில் கூட்டத்தில் எனக்குத் தெரிந்த யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை. அவர் ஒருவர் தான். இப்போது என்னால்... 108 இது உங்கள் உணர்வு மனம் (conscious) போன்றது. பாருங்கள், உங்கள் உள்மனம் (subconscious) தான் நீங்கள் கனவு காணும் இடம். 109 ஓரிரு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மூளை அலை (brain wave) மூலம், நேர அலை மூலம் எனக்கு ஒரு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. டாக்டர்கள் வெளியே வந்து, "ஏய், நீங்கள் ஒரு விசித்திரமான நபர்," என்றார்கள். நான் கேட்டேன், "என்ன விஷயம்?" 110 சொன்னார்கள், "உங்களுக்குத் தெரியுமா?" சொன்னார்கள், "நீங்கள் விழித் திருக்கும்போதே கனவு காண முடியும்." நான் கேட்டேன், "என்ன?" சொன்னார்கள், "நீங்கள் விழித்திருக்கும் போதே கனவு காண முடியும்." நான் சொன்னேன்... 111 சொன்னார்கள், "இதோ உங்கள் முதல் உணர்வு நிலை," சொன்னார்கள், "இது உங்கள் ஏழு, அல்லது உங்கள் ஆறு புலன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது; பார்த்தல், சுவைத்தல், உணர்தல், நுகர்தல் மற்றும் கேட்டல். நீங்கள் ஆறு புலன்களில் இருக்கும் வரை மட்டுமே உங்கள் முதல் உணர்வு நிலை செயல்படும்." சொன்னார்கள், "இதோ உங்கள் உள்மனம்." சொன்னார்கள், "இவை செயல்படாத போது, ​​நீங்கள் உங்கள் உள்மனதிற்குச் செல்கிறீர்கள். இவை செயல்படாதபோது, ​​நீங்கள் தூங்கு கிறீர்கள், நீங்கள் இங்கே சென்று ஒரு கனவு காண்கிறீர்கள், உங்களில் ஒரு பகுதி அங்கே செல்கிறது. பிறகு நீங்கள் இங்கே திரும்ப வரும்போது," சொன்னார்கள், "உணர்வு, சுவை, பார்வை, நுகர்வு மற்றும் கேள்வி ஆகிய உங்கள் புலன்களுக்கு வெளியே இருந்தபோது நீங்கள் என்ன கனவு கண்டீர்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்கிறீர்கள்." பாருங்கள்? மேலும் சொன்னார்கள், "அது சாதாரணமானது." 112 சொன்னார்கள், "நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. ஆனால் உங்களுடைய இரண்டும் இங்கேயே ஒன்றாக இருக்கின்றன," சொன்னார்கள், "உள்மனம் மற்றும் உங்கள் மற்ற உணர்வு மனம் ஆகிய இரண்டிலிருந்தும் உங்கள் நேர அலைகள். என் வாழ்நாளில் இதற்கு முன்பு இதைக் கேள்விப்பட்டதே இல்லை." சொன் னார்கள், "மனிதனே, நீங்கள் எழுந்து நின்றுகொண்டும் விழித்திருக்கும்போதும் ஒரு கனவு காண முடியும்." நான் கேட்டேன், "டாக்டர், நீங்கள் தரிசனம் பற்றி எப்போதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா?" அவர் சொன்னார், "இல்லை, நான் கேள்விப்பட்டதாக நினைக்கவில்லை." நான் கேட்டேன், "நீங்கள் ஒரு விசுவாசியா?" 113 அவர் சொன்னார், "நான் பிரஸ் பிடீரியன், சகோதரர் பிரான்ஹாம், ஆனால்," சொன்னார், "அவ்வளவுதான்." சொன்னார், "போதகர் அங்கே சிலரை வைத்திருக்கிறார், ஒவ்வொரு வியாழக்கிழமை இரவும்," சொன்னார், "நான் கேட்பதெல்லாம் 'பிரஸ்பி டீரியன், பிரஸ்பிடீரியன், பிரஸ்பிடீரியன்.' நான் கீழே செல்வது கூட இல்லை," என்றார். நான் கேட்டேன், "நீங்கள் வேதாகமத்தில் எப்போதாவது வாசித்திருக்கிறீர்களா?" அவர் சொன்னார், "வாசித்திருக்கிறேன்." 114 "பழைய ஏற்பாட்டின் பழைய தீர்க்கதரிசிகள் வேறொரு பரிமாணத்திற்குச் சென்றதையும் அதையும் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" அவர் கேட்டார், "நீங்கள் அதைத்தான் பேசுகிறீர்களா?" நான் சொன்னேன், "அதுதான்." மேலும் நான் சொன்னேன்... 115 அவர் சொன்னார், "சரி, அது அற்புதமாக இருக்கும். சொல்லுங்கள், சகோதரர் பிரான்ஹாம், நீங்கள் செல்ல வேண்டும்..." 116 நான் சொன்னேன், "நான் ஏற்கனவே மேயோஸ் (Mayos') மருத்துவமனையில் நேர்காணல் செய்யப்பட்டிருக்கிறேன், பாருங் கள்." மேலும் அவர்... நான் சொன்னேன், "ஆனால், பாருங்கள், நீங்கள் எப்போதாவது ஒரு கனவு காண்கிறீர்களா, டாக்டர்?" அவர் சொன்னார், "ஓ, நிச்சயமாக." 117 நான் சொன்னேன், "அப்படியானால், எனக்கொரு கனவு காணுங்கள். சும்மா தூங்கி எனக்கொரு கனவு காணுங்கள், நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். உங்களால் அதைச் செய்ய முடியாது. ஆனால் உங்களைக் கட்டுப்படுத்துபவர் யாரோ, அவர் என்னைப் பற்றி உங்களுக்கு ஒரு கனவைக் கொடுக்க முடியும், பிறகு நீங்கள் விழித்து அதைச் சொல்லலாம்." 118 என்னாலும் அதைச் செய்ய முடியாது. இங்கே, என்னால் எதையும் சொல்ல முடியாது. அவர்தான் அதைச் செய்ய வேண்டும். அவர் மேலுள்ள உங்கள் விசுவாசம், இந்த வார்த் தையை உறுதிப்படுத்துகிறது. அந்தப் பெண் மணி, யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டால் அது நடக்கும் என்று நம்பினாள். இப்போது, ​​அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். இப்போது அது மட்டும்தான் விஷயம். 119 பாருங்கள், நீங்கள் பாவனைகளைப் பார்க்கும்போது, மற்றும் பல, நண்பரே, அது உங்களைச் சற்று வருத்தமடையச் செய்கிறது. ஆனால் எப்படியும் தொடர்ந்து செல்லுங்கள். அது-அது சரியாகிவிடும், பாருங்கள். இப்போது, ​​பாருங்கள், அதற்காக நீங்கள் பிறந்திருக்க வேண்டும். நீங்கள் பிறந்திருக்கிறீர்கள், எல்லா இயற்கையான வரங்களும் உங்களுக்கு வருகின்றன. "வரங்களும் அழைப்புகளும் மனமாறுதல் இல்லாதவை." ஒரு மனிதனைப் போல... நான் சற்று முன்பு பால் கெயினிடம் பேசிக்கொண்டிருந்தேன்... எர்னி ஃபோர்டு (Ernie Ford), மற்றும் ரெட் ஃபோலி (Red Foley), மற்றும் எல்விஸ் பிரெஸ்லி (Elvis Presley) போன்றவர்கள், பாடுவதில் பெரிய திறமைகளை வைத்துக் கொண்டு, அதை உலகத்திற்காகப் பயன் படுத்துகிறார்கள். தேவன் அவர்களுக்கு அந்தத் திறமைகளைக் கொடுத்தார், அவர்கள் அதைக் கொண்டு என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்? 120 அதை அவர்களுக்குக் கொடுத்தவரி டமிருந்து முப்பது வெள்ளிக்காசுகளைப் பெறுவதற்காக யூதாஸ் இஸ்காரியோத்து அதைப் பயன்படுத்துவதைப் போல இருக்கிறது. அவர்கள் அதைத் தேவனுடைய ராஜ்யத்திற்காகப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் அதைக் கலக்கும்போது, ​​அவர்கள் ஒரு பாடலைப் பாட அனுமதிக்கப்படக்கூடாது என்று நான் நினைக் கிறேன்; அது சபைக்கும் மக்களுக்கும் உரியது, அங்கே வெளியே இன்னும் அதிகமான மாய்மாலத்தை உண்டாக்குவதற்கு அல்ல. தென்னாப்பிரிக்காவிற்குச் செல்லுங்கள், அவர்கள், "ஏன், எல்விஸ் பிரெஸ்லி (Elvis Presley) மிகவும் பக்திமுள்ள பையன், அவன் பாடல்களைப் பாடுகிறான்," என்கிறார்கள். ஓ! அது ஒன்றுமில்லை. என்னைப் பொறுத்தவரை, அது மற்றொரு யூதாஸ். தேவனுடைய வரங்களை எடுத்து அவற்றைத் திரிக்கிற மக்கள் அனைவரும் அப்படித்தான். 121 தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக ஒரு சமயக் கோட்பாட்டிற்காக அதை எடுத்துத் திரித்து, தேவனுடைய வார்த்தையினால் அல்லாமல் ஒரு சமயக் கோட்பாட்டினால் செல்வாக்குச் செலுத்தத் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தும் ஒரு ஊழியக்காரருக்குக் கூட, அது இரண்டாம் தர யூதாஸ் தான். நான்... 122 நான் அந்தக் காரியங்களைச் சொல்லியிருக்கக் கூடாது. நீங்கள்... நான் உங்களைக் காயப்படுத்தியிருந்தால், என்னை மன்னியுங்கள். நான் அந்தக் காரியங்களை இங்கே சொல்ல வேண்டியதில்லை. சரி. இங்கே ஒரு விஷயம், அவர் எனக்குச் சொல்வதை என்னால் சொல்ல முடியும். நீங்கள் ஜெபம் செய்யுங்கள். 123 இப்போது, ​​ஆண்டவரே, உம்மிடமிருந்து வரும் ஒரு வார்த்தை, என் வாழ்நாளில் நான் சொல்வதை விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும். நான் விசுவாசிக்கிறேன். நீர் அதை வாக்குத்தத்தம் செய்தீர். நான் உம்முடையவன். உம்முடைய ஆவியானவர் இங்கே இருப்பதை அவர்கள் பார்க்கட்டும், அப்போது அவர்கள் ஜெபிக்கப்படுவதற்காக இந்த ஜெப வரிசைக்கு வரும்போது, ​​அவர்கள் புரிந்து கொள்வார்கள், ஆண்டவரே. "விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்." இது உம்முடைய ஊழியன் அல்ல என்பதை அவர்கள் பார்க்கும்படி நான் ஜெபிக்கிறேன். அது நீர் தான். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். 124 ஒரு கணம் அமைதியாக அமருங்கள். என்னால் இதை உருவாக்க முடியாது. நீங்கள் கேட்கலாம், "சகோதரர் பிரான்ஹாம், என்ன?" என்னால் உங்களிடம் சொல்ல முடியாது. அவர் எனக்குக் காட்டுவதை மட்டுமே என்னால் சொல்ல முடியும். 125 இயேசு சொன்னார், "பிதா எனக்குக் காட்டுவதற்கு முன் நான் ஒன்றும் செய்வதில்லை. பிதா எதைச் செய்கிறாரோ, குமாரனும் அதையே செய்கிறார்." 126 இங்கே, நீங்கள் உங்கள் தலைகளை நிமிர்த்தியிருந்தால், இங்கே பாருங்கள். பாருங்கள், வரிசையின் கடைசியில் அமர்ந்திருக்கும் அந்தச் சிறிய பெண்மணி? அவர் பெண்களுக்குரிய பிரச்சனையால், ஒரு ஸ்திரீக்குரிய பிரச்சனையால் அவதிப்படுகிறார். அது சரிதானே, இளம் பெண்ணே. அது சரியே, இரத்தப்போக்கு மற்றும் அனைத்தும். அது சரியா, உங்கள் கையை உயர்த்துங்கள்? நீங்கள் முற்றிலும் அந்நியர். அங்கே வரிசையின் முடிவில் இருக்கும் சகோதரியின் மேல் ஒளி இருக்கிறது, ஒரு சிறிய பெண்மணி, தலைமுடியுள்ள ஒரு இளம் பெண்... நான் அவரைக்குளியலறையில் பார்க்கிறேன். நீங்கள் இப்போது நம்பினால்! இப்போது, ​​அப்படியே ஏதோ ஒன்று நடந்தது உங்களுக்குத் தெரியும். திடீரென்று, ஏதோ ஒன்று உங்களுக்குள் ஊடுருவிச் சென்றது. இல்லையா? அதுதான் உங்கள் சுகம். பாருங்கள், அது அப்போதுதான் விடுவித்து எடுத்துப்போட்டது. உங்கள் விசுவாசம் உங்களை இரட்சித்தது. 127 நம் கர்த்தர் செய்த அதே காரியம் இதுவல்லவா? உன்... அந்தப் பெண்ணுக்குப் பெரும்பாடு இருந்தது. அவள் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு, திரும்பினாள். அவர் அதை உணர்ந்தார். அவர் பார்த்தார். அவர் சொன்னார், "உன் பெரும்பாடு," அது நின்றுபோனதாக அவள் உணர்ந்தாள். இயேசு கிறிஸ்து செய்த அதே காரியம் தான் இங்கேயும் இருக்கிறது. அது என்ன? அது அவர் தான். ஓ, நீங்கள் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் இதற்கு நான் மட்டுமே பொறுப்பு. தேவன் தனது வார்த்தைக்கு மட்டுமே பொறுப்பு. 128 இங்கே, நீங்கள் அறிந்துகொள்ளும்படி. அவருக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் ஒரு பெண்மணிக்கு வலிப்பு நோய் (epilepsy) இருக்கிறது, வலிப்பு நோய் தாக்கங்கள் வருகின்றன. நீங்கள் விசுவாசித்தால், தேவன் உங்களிடமிருந்து வலிப்பு நோயை எடுத்துப் போடுவார், அம்மையாரே. நீங்கள் நம்பினால் அவர் அதைச் செய்வார். விசுவாசம் வையுங்கள். சந்தேகிக்காதீர்கள். 129 நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா? இப்போது இங்கே இந்தப் பகுதியில் உள்ள யாராவது, இங்கே உள்ளே எங்காவது, அப்போதுதான் நீங்கள் பார்ப்பீர்கள். பாருங்கள், அது என்னவென்றால், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்... 130 நான் இப்போது செல்வதற்கு முன், என்னைச் சற்று இளைப்பாற்றிக்கொள்ள ஒரு விஷயத்தைச் சொல்லுகிறேன். 131 பாருங்கள், அது, அது உங்களைப் பாதிக்கிறது. நான் பிரசங்கித்ததை விட இதற்கு அதிக பலன் தேவைப்படுகிறது. நிச்சயமாக. பாருங்கள், அது நீங்கள் தேவனுடைய வரத்தைப் பயன்படுத்துவதாகும். தேவன் வரத்தைத் தானாகக் கொடுத்திருந்தால்... அல்லது தரிசனத்தைத் தானாகக் கொடுத்திருந்தால்... லாசரு மரித்ததை இயேசு கண்டு, வீட்டிலிருந்து விலகிச் சென்று காத்திருந்தது போல; பின்னர் என்ன நடக்கும் என்று அவர்களிடம் சொல்லி, திரும்பி வந்து அதைச் செய்தார், அவர் பலவீனமடைந்ததாக ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் அந்த ஒரு சிறிய பெண், அது தேவனுடைய வரத்தைப் பயன்படுத்திய பெண். அது நீங்கள் தான். தேவனுடைய வரம், அவர் அதைச் செயல்படுத்தும்போது, ​​அது அப்படிச் செய்வதில்லை. ஆனால் நீங்கள் அதைச் செயல் படுத்தும்போது; அப்போதுதான் தேவன் உங்களைத் தன் கைகளில் வைத்து, "இது இந்த வழியாக, இங்கேயும் இங்கேயும் இங்கேயும் இருக்கும். இது இப்படித்தான் இருக்கும்," என்று சொல்கிறார். அப்படித்தான் இருக்கிறது; அது உங்களைத் தொந்தரவு செய்யாது. ஆனால் அந்த நபர்கள் உள்ளே வந்து அதை இழுக்கும்போது, ​​அதுதான் அதைச் செய்கிறது. அதுதான் அதைச் செய்கிறது. 132 இன்றைய மக்கள், லவோதிக்கேயா சபைக்காலம், கடைசி கவுண்டவுன் (countdown). மறுநாள் இரவு நீங்கள் பார்த்தீர்களா, ரோமின் போப் (Pope) வரலாற்றிலேயே முதல் முறையாக எருசலேமுக்கு விஜயம் செய்வதற்கு முன்பு? இதற்கு முன்பு ஒரு போப் எருசலேமுக்கு அனுப்பப்பட்டதே இல்லை. பாருங்கள், அவர் ரோமில் இருந்து எருசலேமுக்குச் சென்றார். சபை, சந்திரன் சபையைப் பிரதிபலிக்கிறது, சூரியன் இல்லாத நேரத்தில் அதன் ஒளியைப் பிரதிபலிக்கிறது. தேவன் பூமியில் அறிவிப் பதற்கு முன்பே வானங்களில் அடையா ளங்களைச் செய்கிறார். சந்திரன் முழுமையாக இருட்டடிப்புச் (blackout) செய்யப்பட்டதை நீங்கள் கவனித்தீர்களா? எருசலேம் உலகின் பழமையான சபை. பாருங்கள்? இந்த எக்குமெனிக்கல் கவுன்சில் (Ecumenical Council) மற்றும் இந்தக் காரியங்கள்... 133 மனிதனே, நீங்கள் இங்கே இருந்தால், இது உண்மையில் உங்களுக்குள் ஊடுருவிச் செல்லும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ளும்போது, ​​நீங்கள் மிருகத்தின் முத்திரையை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாதா, என் நண்பரே? "ஓ," நீங்கள் சொல்கிறீர்கள், "அது நடப்பதை நான் பார்த்தால்!" அப்போது மிகவும் தாமதமாகிவிடும். நீங்கள் அதை அப்போதே செய்துவிட்டீர்கள். பாருங்கள்? அந்த நேரத்தில் அது மிகவும் தாமதமாகிவிடும். நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் எண்ணெய் வாங்க வந்தார்கள், ஆனால் அங்கே... முடியவில்லை. 134 என்ன நடந்தது என்று கவனித்தீர்களா, எது சந்திரனை இருட்டடிப்புச் செய்தது? உலகம் அதன் குறுக்கே வந்தது. அப்படியே பிரஸ்பிடீரியன், மெதடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தெகொஸ்தே மற்றும் நம்மில் உள்ளவர்கள் மத்தியில் வேதத்தின் ஒளிக்குக் குறுக்கே உலகம் வந்துவிட்டது. அதற்காகத் தான் அந்த இருட்டடிப்பு. 135 லவோதிக்கேயா சபைக்காலம் மட்டுமே இயேசு வெளியே நின்று உள்ளே வர முயற்சிக்கும் ஒரே சபைக்காலம் என்பதையும் நீங்கள் கவனித்தீர்களா? "அவர்களைத் தனியே விடுங்கள்" என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை என்பதை நீங்கள் கவனித்தீர்களா? இயேசுவே வார்த்தை (அது சரியா?), வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை. இப்போது அவர்... இப்போது கவனியுங்கள். அவர், பாருங்கள், விலகிச் சென்று அவர்களை விட்டுவிடவில்லை, ஆனால் எங்காவது கொஞ்சம் ஒத்துழைப்பைப் பெற அவர் முயற்சித்துக் கொண்டிருந்தார். "எவனொருவன் கதவைத் திறப்பானோ, நான் அவனிடத்தில் உட்பிரவேசித்து, அவனோடு போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடு போஜனம் பண்ணுவான்." ஆனால், கதவு இல்லை, பாருங்கள்; வெளியே நின்று உள்ளே வர முயற்சிக்கிறார். அவர்கள் மனிதனை நிராகரிக் கவில்லை. அவர்கள் தேவனை நிராகரிக் கிறார்கள். 136 அங்கே கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கும் சிறிய பெண்மணியே, அதை நீங்கள் நம்புகிறீர்களா? ஆம். நீங்கள் அதை நம்புகிறீர்களா? இப்போது சில ஆழமான எண்ணங்கள் இருந்தன. நீங்கள் நம்பினால் உங்கள் கண்கள் குணமாகும். 137 இப்போது நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். யாரோ ஒருவர் சொல்கிறார், "அவர் கண்ணாடி அணிந்திருக்கிறார், அதனால் இவருக்குத் தெரிந்துவிட்டது." இல்லை. 138 இங்கே பாருங்கள். இங்கே வாருங்கள்; இங்கே வரவேண்டாம், ஒரு நிமிடம் என்னைப் பாருங்கள். நான் அவருடைய ஊழியக்காரன், அல்லது அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் என்னை நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்கள். இப்போது நீங்கள் கொண்டிருந்த எண்ணங் களுடன் நீங்கள் அதைச் செய்திருக்க வேண்டும், "அது எப்பேர்ப்பட்ட வெளிப்பாடு, சந்திரன், மற்றும் அதைப் பிரதிநிதித்துவப்படுத்துவது," என்று எவ்வளவு மர்மமாக நினைத்துக் கொண்டிருந்தீர்கள். அது சரியா? அது சரிதானே, உங்கள் கையை உயர்த்துங்கள். 139 இப்போது அவள் தன் இருதயத்தில் என்ன நினைத்தாள் என்று என்னால் எப்படி அறிய முடியும்? "தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைப் பார்க்கிலும் கூர்மையானது, இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறதாயிருக்கிறது." 140 இப்போது யாருக்காகவாது ஜெபி யுங்கள், அல்லது ஏதாவது செய்யுங்கள். இங்கே, இதோ இப்போது உங்கள் இருதயத்தில் தோன்றுகிறது. இங்கே, உங்கள் இருதயத்தில் இருப்பது இதுதான். நீங்கள் இரண்டு சகோதரர்களுக்காக ஜெபிக்கிறீர்கள், அவர்கள் இருவரும் குடிகாரர்கள். அது சரியானால், உங்கள் கைகளை உயர்த்துங்கள். சரி. 141 சரி, பாருங்கள், இதோ இருக்கிறீர்கள். பாருங்கள்? அங்கே பாருங்கள்? பாருங்கள்? "இது இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைப் பார்க்கிலும் கூர்மையானது, இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகைய றுக்கிறதாயிருக்கிறது." நண்பர்களே, நீங்கள் அதைப் பார்க்கவில்லையா? நாம் அந்நிய பாஷைகளில் பேசுவதைத் தாண்டிச் சென்று விட்டோம். நாம் ஒரு விண்வெளி வீரர் காலத்தில் இருக்கிறோம். 142 இங்கே, அவருக்கு நேர் எதிரே ஒரு மனிதர் தலைவணங்கி இருக்கிறார். அவருக்கு மெல்லிய முடி இருக்கிறது, வெள்ளைக் கோட் அணிந்திருக்கிறார், கண்ணாடி அணிந்திருக்கிறார். அவருக்கு ஒரு ஆவிக்குரிய பிரச்சனை இருக்கிறது, அவர்... ஜான் தாம்... 143 ஓ, ஒரு நிமிடம் இருங்கள், எனக்கு அந்த மனிதரைத் தெரியும். ஒரு நிமிடம் இருங்கள். மன்னிக்கவும். எனக்கு அந்த மனிதரைத் தெரியும். அது சரியே. நான் அவரை ஒருமுறை சந்தித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன், எங்கேயோ. எனக்கு நினைவில் இல்லை. சமீபத்தில் டியூஸானில் (Tucson) என்று நினைக்கிறேன், நான் அவர்கள் கைகளைக் குலுக்கினேன்... மற்றும்-மற்றும் அது சரிதான். 144 ஆனால் நீங்கள் அங்கே தேவனை நோக்கிக் கூப்பிட்டுக் கொண்டிருந்தீர்கள். உங்களுக்குக் கட்டுப்படுத்தத் தெரியாத ஒரு பெரிய ஆவிக்குரிய பிரச்சனை இருக்கிறது. பாருங்கள், திரு. தாமஸ், கவலைப்பட வேண்டாம், அது சரியாகிவிடும். இப்போது இது... என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படி. நீங்கள் சொன்னீர்கள், "சரி, அவருக்கு அந்த மனிதரைத் தெரியும்." சரி, அது அவருடைய மனைவி அவருக்குப் பக்கத்தில் அமர்ந்தி ருக்கிறார். அது திரு. தாமஸ் அவர்களுடைய பிரச்சனை என்று எனக்குத் தெரியாது. அவர் அதற்குச் சாட்சி சொல்வார். ஆனால் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அவருடைய மனைவிக்கு ஒரு காது பிரச்சனை இருக்கிறது, அதனால் அவர் அவதிப்படுகிறார். அது சரியா? அது சரியே. சரி. 145 இங்கே, அடுத்த பெண்மணியை எடுத்துக்கொள்ளுங்கள், அவருக்கு அடுத்த பெண்மணி. இந்தப் பக்கமாகப் பாருங்கள், அம்மையாரே. நான் அவருடைய ஊழியக்காரன் என்று நம்புகிறீர்களா? சிவப்பு கோட் அணிந்திருக்கும் அந்தச் சிறிய பெண்மணி, நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்களும் ஒரு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள். உங்களுக்கு எல்லா நேரமும் தலைவலி (headaches) இருக்கிறது. தேவன் அவற்றைக் குணமாக்குவார் என்று நம்புகிறீர்களா? நீங்கள் நம்பினால், உங்கள் தலை, கைகளை உயர்த்தி, "நான் அதை நம்புகிறேன்," என்று சொல்லுங்கள். சரி. அது நல்லது. பாருங்கள்? சரி, நீங்கள் அதை நம்பினால்! 146 இங்கே, அவருக்குப் பக்கத்தில் நீல நிற கோட் அணிந்திருக்கும் சிறிய பெண்மணி. சகோதரியே, நீங்கள் நம்புகிறீர்களா? தேவன் இதய நோயைக் (heart trouble) குணமாக்கி உங்களைச் சுகமாக்க முடியும் என்று நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்களா? சரி, நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளலாம். 147 அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண்மணி, வயதான பெண்மணி, நரைத்த முடி. தேவன் குணமாக்க முடியும் என்றும், உயர் இரத்த அழுத்தத்தைக் (high blood pressure) குணமாக்கி உங்களைச் சுகமாக்க முடியும் என்றும் நம்புகிறீர்களா? சரி, நீங்கள் உங்கள் சுகத்தைப் பெற்றுக்கொள்ளலாம். பாருங்கள்? 148 அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண்மணி, உங்கள் காதுகளிலும் பிரச்சனை இருக்கிறது. தேவன் காது பிரச்சனையை (ear trouble) குணமாக்குகிறார் என்று நம்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் சுகத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 149 அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண்மணி. அம்மையாரே, தேவன் குணமாக் குகிறார் என்று உங்கள் முழு இருதயத்தோடும் நம்புகிறீர்களா? நீங்கள் எதையோ குறித்து ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்கள். தேவன் குண மாக்குகிறார் என்று உங்கள் முழு இருதயத்தோடும் நம்புகிறீர்களா? சரி, நீங்கள் அதை முழு இருதயத்தோடும் நம்பினால், உங்கள் வயிற்றுக் கோளாறு (stomach trouble) குணமாகும். நீங்கள் வீட்டிற்குச் சென்று, சாப்பிட்டுச் சுகமாக இருக்கலாம். 150 ஐயா, அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நீங்கள். தேவன் உங்களையும் குணமாக்கிச் சுகமாக்க முடியும் என்று நம்புகிறீர்களா? அதை ஏற்றுக்கொள்வீர்களா? உங்களில் மீதமுள்ள எத்தனை பேர் அதை முழு இருதயத்தோடும் நம்புவீர்கள்? நிச்சயமாக, நீங்கள் நம்புவீர்கள். 151 வயிற்றுக் கோளாறு, இதய நோய், எல்லாவற்றையும் தேவன் குணமாக்குகிறார், சுகமாக்குகிறார். அது சரியே. நீங்கள்... 152 அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மனிதர், அவருக்கு முதுகு பிரச்சனை (back trouble) இருக்கிறது. ஐயா, தேவன் முதுகு பிரச்சனையைக் குணமாக்குகிறார் என்று நம்புகிறீர்களா? நம்புகிறீர்களா? 153 உங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண்மணிக்கும் முதுகு பிரச்சனை இருக்கிறது. அம்மையாரே, தேவன் முதுகு பிரச்சனையைக் குணமாக்குகிறார் என்று நம்புகிறீர்களா? சரி, உங்களுடையதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அது சரியே. ஓ, நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம்... 154 அதற்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண்மணிக்குப் பெருங்குடல் பிரச்சனை (colon trouble) இருக்கிறது. அது சரியே. அம்மையாரே, தேவன் உங்கள் பெருங்குடல் பிரச்சனையைக் குணமாக்குவார் என்று நம்புகிறீர்களா? நம்புகிறீர்களா? 155 இங்கே, வரிசையில் கீழே, பாருங்கள். அங்கே ஒரு மூளை காயம் (brain injury) இருக்கிறது. தேவன் மூளை காயத்தைக் குணமாக்குகிறார் என்று நம்புகிறீர்களா? நம்புகி றீர்களா? நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளலாம். 156 உங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்தி ருப்பவருக்கு வலிப்பு நோய் (epileptic fits) இருக்கிறது. தேவன் வலிப்பு நோயைக் குணமாக்குகிறார் என்று நம்புகிறீர்களா? 157 உங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப் பவருக்கு... அவருக்குக் கண் பிரச்சனை (eye trouble) இருக்கிறது. ஐயா, தேவன் கண் பிரச்சனையைக் குணமாக்குகிறார் என்று நம்புகிறீர்களா? 158 அதற்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பவர், அந்தச் சிறுவன், அவனுக்கும் வலிப்பு நோய் (epilepsy) இருக்கிறது. தேவன் வலிப்பு நோயைக் குணமாக்குகிறார் என்று நம்புகிறீர்களா? 159 அவனோடு அமர்ந்திருக்கும் அவனது அன்புக்குரியவர், அவருக்குத் தலையில் பிரச்சனை இருக்கிறது. அம்மையாரே, தேவன் உங்கள் தலை பிரச்சனையைக் குணமாக்குவார் என்று நம்புகிறீர்களா? சரி, நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளலாம். 160 ஆமென்! அது என்ன? இந்த நாளுக்கான தேவனுடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைப் பார்க்கிலும் கூர்மையானது, விண்வெளி வீரர் வல்லமையில் இயேசு கிறிஸ்து! அதை நம்புகிறீர்களா? 161 நமது முதல் ஜெப அட்டைகள் என்ன? [யாரோ ஒருவர், "A's" என்று சொல்கிறார்] A-க்கள். ஜெப அட்டை (prayer card) A வைத்திருக்கும் அனைவரும், இந்தப் பக்கமாக எழுந்து நில்லுங்கள். இப்போது விரைவாக வாருங்கள், ஜெப அட்டை A, அபிஷேகம் இப்போது அசைவாடிக்கொண்டிருக்கும் போதே. ஜெப அட்டை A. என்ன? [யாரோ ஒருவர், "அவர்களை மேலே கொண்டு வரவா? அல்லது இங்கே கீழேவா? ஊழியர்களை இடதுபுறம் கொண்டு வாருங்கள்," என்கிறார்.] 162 நாம் என்ன செய்யலாம் என்று சொல்கிறேன்: அவர்களை இங்கேயே கீழே நிற்க வைப்போம், அப்போது நான் கீழே இறங்கி அவர்களுக்காக இங்கே ஜெபிக்க முடியும். அது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். வாருங்கள். [யாரோ ஒருவர், "உங்களுக்கு மைக் வேண்டுமா? கழுத்து மைக் வேண்டும், இல்லையா?" என்கிறார்] 163 நண்பர்களே, இந்தப் பக்கமாக கீழே வாருங்கள், கீழே வாருங்கள், அப்போது நாம் ஒரு வரிசையை உருவாக்கலாம். ஜெப அட்டை A உள்ளவர்கள் அனைவரும் முதலில் நிற்கட்டும், அவர்கள் தங்கள் அட்டைகளை நீண்ட நேரம் வைத்திருக்கிறார்கள். ஜெப அட்டை A உள்ள அனைவரும் இங்கே மேலே எழுந்து நில்லுங்கள். பில்லி (Billy), நீங்கள் கீழே சென்று அவர்கள் வரிசையில் இருக்கிறார்களா என்று பாருங்கள். 164 இப்போது ஜெப அட்டை B, அவர்கள் இவர்களைப் பின்தொடரட்டும். ஜெப அட்டை B வைத்திருக்கும் அனைவரும், A-க்களைப் பின்தொடருங்கள். உங்களால் முடிந்தால், அங்கே மற்ற இடைகழி (aisle) வழியாகச் சுற்றிச் சென்று, உங்கள் வரிசையை அந்த வழியாக வரச் செய்யுங்கள்; A, B. 165 நீங்கள் விசுவாசித்தால் மட்டும் போதும்! ஒரே ஒரு முறை விண்வெளி வீரராக இருங்கள், ஆட்டோமொபைல் மற்றும் விமானத்திலிருந்து விலகி விடுங்கள். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்ற நிலைக்கு உள்ளே செல்வோம். 166 A, B, இப்போது ஜெப அட்டை C வைத்திருக்கும் யாராவது இருந்தால், அவர்களுக்குப் பின்னால் சேருங்கள். ஜெப அட்டை C, இங்கே பின்னால் செல்லுங்கள், இந்த வழியாகச் செல்லுங்கள், நடு இடைகழி வழியாக, குறுக்கே சென்று அங்கே உங்கள் வரிசையை உருவாக்குங்கள். ஜெப அட்டை A, B, C. [யாரோ ஒருவர், "சிலர் மீதமிருக்கலாம். இன்னும் சிலர் இருக்கலாம். எல்லா அட்டைகளையும் கூப்பிடுங்கள்." என்கிறார்] 167 இந்தப் பக்கமாகப் பின்னால். அது சரியே, அந்த வழியாக, அந்த வழியாக உங்கள் வரிசையை உருவாக்குங்கள். இந்த வழியாகத் திரும்புங்கள், அப்போது நாம் வரிசையில் சேர்வதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஜெப அட்டை A, B, C, அவர்கள் முதலில் வரிசையில் நிற்கட்டும். 168 உங்கள் அட்டையை உங்கள் கையில் பிடித்துக்கொள்ளுங்கள், உங்கள் அட்டைகளை வாங்கிக்கொள்ள நான் சில உதவியாளர்களை (ushers) வைப்பேன். எண்களின்படி அவர்களை எப்படி வரிசைப்படுத்தப் போகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் அது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். [யாரோ ஒருவர், "பரவாயில்லை, சகோதரர் பிரான்ஹாம்." என்கிறார்] அவர்களை விடுங்கள். 169 A, B, C, இப்போது D. A, B, C, D, ஜெப அட்டை D. A, B, C, D. ஏதாவது D-க்கள் இருக்கிறதா? நான் முடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஜெப அட்டை A, B, C, D. சரி. இப்போது ஜெப அட்டைகள் வைத்திருக்கும் எவரேனும் இருந்தால், வரிசையில் நில்லுங்கள். ஜெப அட்டைகள் வைத்திருக்கும் அனைவரும், உங்கள் பிரிவுகளில் சென்று வரிசையில் நில்லுங்கள். எண்களின்படி அவர்கள் அனைவரையும் மிகச் சரியாக வரிசையில் நிற்க வைப்பதற்கு, நமக்கு எந்த வழியும் இல்லை. 170 இப்போது நாங்கள் இந்த நோயாளி களுக்காக ஜெபிக்கும்போது, ​​இங்கே எத்தனை பேர் என்னுடன் சேர்ந்து ஜெபிக்கப் போகிறீர்கள் என்று நான் அறிய விரும்புகிறேன். கவனியுங்கள், நீங்கள்... 171 இப்போது, ​​பாருங்கள், "சரி, நான் போய் அது எப்படி நடக்கிறது என்று பார்ப்பேன்," என்று சொல்லி ஜெபிக்கப் படுவதற்காக நீங்கள் இங்கே வரப்போகிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் இருக்கையிலேயே இருப்பது நல்லது. அது நடக்கப்போவதில்லை. பாருங்கள்? 172 இப்போது அவரால் இன்னும் ஒரு காரியத்தைக் கூடச் செய்ய முடியாது, மக்களுக்கு முன்பாக இனி ஒரு அடையாளத்தையும் செய்ய மாட்டார். அது வேதாகமத்தின்படி. அவர் இங்கே செய்ததைத் தவிர வேறு என்ன அடையாளத்தைச் செய்வேன் என்று வாக்குத்தத்தம் செய்தார் என்று யாராவது என்னிடம் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். "சோதோமின் நாட்களில் நடந்தது போலவே," மற்றும் மல்கியா 4, மற்றும் அவர் அளித்த அந்த வாக்குறுதிகள் அனைத்தும், ஒரே விஷயத்தையே குறிக்கின்றன. சபைக்கு இனி எந்த அடையாளமும் கொடுக்கப்படாது. நீங்கள் பார்க்கும் அடுத்த விஷயம் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுதல் (flight into Heaven) ஆகும். அவர்கள் மேலே எடுத்துக்கொள்ளப்படுவார்கள். 173 அதைத் தவறவிடாதீர்கள், நண்பரே, அதைத் தவறவிடாதீர்கள். நினைவில் கொள்ளுங்கள், என் குரலைக் கேளுங்கள். நீங்கள் உள்ளே வரவில்லை என்றால், அது உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களைத் வேட்டையாடும். அங்கே வெளியே, உங்கள் தண்டனைக்காக நீங்கள் அவதிப்படும் போது, ​​எங்கே அழுகையும் புலம்பலும் பற்கடிப்பும் இருக்குமோ, அங்கே அந்த இருண்ட, பயங்கரமான நரகத்தில் அந்தக் குரல் முன்னும் பின்னுமாக அலறுவதை நீங்கள் எல்லா நேரமும் கேட்பீர்கள். தவறவிடாதீர்கள். இப்போது உங்கள் வாய்ப்பு. 174 இப்போது, ​​ஓ, அங்கே பலர் இருக்கிறார்கள்! என்னால் முடியுமா என்று யோசிக்கிறேன்... என்னோடு கூட ஜெபிப்பதற்கு நீங்கள் சகோதரர்கள் உதவுவீர்களா, அது சரியாக இருக்குமா? இப்போது, ​​இவர்கள் ஊழியர்களா, இங்கே? நான் இந்த இடத்தை விட்டுச் செல்ல மாட்டேன்... 175 இப்போது, ​​பாருங்கள், நான் விமானம், ஆட்டோமொபைல் பற்றி சில கடுமையான விஷயங்களைச் சொன்னேன். நினைவில் கொள்ளுங்கள், அவையும் குதிரைத்திறன் தான். அனைத்தும் குதிரைத்திறன் தான். சபை பரிசுத்த ஆவியின் வல்லமையில் மேலே நகர்கிறது: நாம் நீதிமானாக்கப்படுவது பரிசுத்த ஆவியினால் தான். ஊழியர்களாகிய உங்களுக்கு அது தெரியும், இல்லையா? பரிசுத்த ஆவி நம்மைப் பரிசுத்தமாக்குகிறது. பரிசுத்த ஆவி நம்மை நிரப்புகிறது. நாம் மேலே நகரும்போது, பரிசுத்த ஆவி நமக்கு எடுத்துக்கொள்ளப்படும் விசுவாசத்தைத் தருகிறது, பாருங்கள். 176 இப்போது, ​​"ஓ, சகோதரர் பிரான்ஹாம் பெரிய ஆள்!" என்று நீங்கள் நினைக்கும்படி நான் இந்த நாட்டை விட்டுச் செல்ல மாட்டேன். நான் அப்படி இல்லை. அந்தப் போதகர்களுடன் அமரக் கூட நான் தகுதியற்றவன். நான்-எனக்குப் படிப்பறி வில்லை. நான், நான் பருவமில்லாத காலத்தில் பிறந்த ஒருவன். உங்கள் போதகர் உங்களுக்குப் போதித்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தவே தேவன் என்னை இந்தச் சிறிய காரியத்தைச் செய்ய விடுகிறார், அதனால்தான். அவர்கள் தேவனுடைய மனிதர்கள். 177 கேளுங்கள், நீங்கள் நோயாக இருந்தால், சகோதரர் ஓரல் ராபர்ட்ஸ் (Brother Oral Roberts), அல்லது சகோதரர் பால் கெயின் (Brother Paul Cain), அல்லது நான், அல்லது வேறு யாருக்காகவும் நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. உங்கள் தேவபக்தியுள்ள போதகர், அவருடைய பரிசுத்த கரங்கள் உங்கள் மேல் இருக்க, உங்களுக்காக ஜெபிக்கும்படி நீங்கள் அவரை அழைத்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் காய்ச்சலால் கொதித்துக் கொண்டிருக்கும்போது அவர் உங்கள் மேல் கைகளை வைக்கிறார்; உங்களுக்குத் தெரிவதற்கு முன்பே, சில நாட்களில் உங்களுக்கு அந்தக் காய்ச்சல் இருக்காது, நீங்கள் குணமாகிவிடுவீர்கள். அது என்ன? அது உங்களோடு சேர்ந்த உங்கள் போதகரின் விசுவாசம். ஆம், ஐயா. அவர் ஓரம் கட்டப்பட்ட மனிதர் அல்ல. அவர் தேவனுடைய ஊழியக்காரர், தன் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்துடன் முன்னணியில் நிற்கிறார். நிச்சயமாக. அவர் அப்படித்தான் இருக்கிறார். 178 நாம் ஜெபிக்கும்போது இந்தப் போதகர்கள் இங்கே வந்து என்னுடன் நிற்கும்படி நான் கேட்கப் போகிறேன். நீங்கள் அனைவரும் அதைச் செய்வீர்களா? இங்கே வாருங்கள் மற்றும்... நான் உங்களுடன் கீழே இறங்கி வரப்போகிறேன், இங்கே ஒரு இரட்டை வரிசையை (double line) உருவாக்குவோம். இப்போது மக்கள் குணமடையும் போது, ​​அவர்களால் சொல்ல முடியாது, "பாருங்கள்..." எனக்கு உங்கள் கைகள் வேண்டும், போதகரே; என் சகோதரர்களே, நீங்கள். இப்போது நாம்... நீங்கள்... நீங்கள்... 179 நீங்கள், "சரி, நான் முயற்சிப்பேன். நான்..." என்று சொல்லி வந்தால், இல்லை, அதைச் செய்யாதீர்கள். வேறொருவரின் இடத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். பாருங்கள்? நீங்கள் கேட்டதைப் பெறப்போகிறீர்கள் என்பதை அறிந்து வாருங்கள். 180 இங்கே பாருங்கள், எப்பேர்ப்பட்ட ஊழியர் கூட்டம்! ஓ! நான் இந்த மனிதர்களில் பெரும்பாலானோரைச் சந்தித்திருக்கிறேன். எனக்கு அவர்களைத் தெரியும். காலை உணவுக் கூட்டங்களிலும், மற்ற இடங்களிலும் சந்தித்ததன் மூலம் எனக்கு அவர்களைத் தெரியும். அவர்கள் தேவபக்தியுள்ள மக்கள். அவர்கள் தேவனுடைய ஊழியர்கள். 181 இப்போது இங்கே பாருங்கள். பெந்தெகொஸ்தே நாளில், பரிசுத்த ஆவி தன்னைப் பிரித்துக்கொண்டு, அக்கினி நாவுகள் ஒவ்வொருவர் மீதும் அமர்ந்தன. பெரிய அக்கினி ஸ்தம்பம் பிரிந்து, ஒவ்வொருவரும் அந்தப் பரிசுத்த ஆவியின் ஒரு பகுதியை, அக்கினி நாவுகளைப் போலத் தங்கள் மேல் பெற்றார்கள். சரி, நீங்கள் ஒரு அக்கினி நாவையும், இரண்டு அக்கினி நாவுகளையும் ஒன்றாகச் சேர்த்தால், ஒன்றை விட இரண்டு மடங்கு பலத்தைப் பெறுவீர்கள். நினைவில் கொள்ளுங்கள், எசேக்கியேல், தன் கையில் இரண்டு கோல்களைப் பற்றிய தரிசனத்தில், பாருங்கள்? 182 இப்போது இங்கே பாருங்கள், உங்களிடம் என்ன இருக்கிறது என்று பாருங்கள், தேவனுடைய இந்த மனிதர்கள் அனைவரும்! அதுமட்டுமல்லாமல், அங்கே சபையில் எத்தனை பேர் ஜெபிக்கப் போகிறீர்கள், உங்கள் கையை உயர்த்துங்கள்? இங்கே பாருங்கள்! இப்போது, ​​ஜெப வரிசையில் உள்ள மக்களே, இதைப் பாருங்கள். இங்கே பாருங்கள், உங்களுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் ஜெபிக்கப் போகிறார்கள். 183 இப்போது பரிசுத்த ஆவியானவர், இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார், அவர் இங்கே இருப்பதைத் தகுதிப்படுத்துகிறார். அவரால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. இப்போது ஜெப வரிசையில் உள்ள எத்தனை பேர் அதை நம்புகிறீர்கள், உங்கள் கைகளை உயர்த்துங்கள்? இப்போது நாம் அனைவரும். 184 இப்போது நான் சகோதரர் பார்டர்ஸ் (Borders), அல்லது பாடல் தலைவர் யாரோ அவரை அழைக்கப் போகிறேன். பாடல் தலைவர் யார்? உங்களிடம் மைக் இருக்கிறதா? சரி. 'ஒன்லி பிலீவ்' (Only Believe - விசுவாசிக்க மட்டும் செய்) என்ற அந்தப் பாடலைப் பாட நான் அவர்களில் சிலரை இங்கே அழைக்கப் போகிறேன். "எல்லாம் கூடும், விசுவாசிக்க மட்டுமே." (All things are possible, only believe.) 185 பிறகு அவர்கள் இந்தப் பாடலைப் பாடும்போது, ​​ஒவ்வொரு நபரும் ஜெபத்தில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். செய்யாதீர்கள்-செய்யாதீர்கள், ஏதேனும் சிறப்பான ஒன்று நடந்தால் ஒழிய, மேலே பார்க்கக் கூட வேண்டாம். 186 இப்போது நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும். இந்த மக்களில் சிலருக்கு இது மரணத்திற்கும் வாழ்விற்கும் இடைப்பட்ட விஷயம். அவர்கள் புற்றுநோய், மற்றும் கட்டி, மற்றும் காசநோய் (TB), மற்றும் எல்லாவற்றோடும் அங்கே இருக்கிறார்கள், மரித்துக்கொண்டிருக்கிறார்கள். அது உங்கள் தாயாக இருந்தால் என்ன செய்வது? இது நினைவில் கொள்ளுங்கள், இது யாருடையதோ... இப்போது மிகுந்த பயபக்தியுடன் இருங்கள். அவர்கள் கடந்து வரும்போது நாங்கள் அவர்கள் மேல் கைகளை வைப்போம்... நான் இந்த மனிதர்களுடன் கீழே வருகிறேன். அவர்கள், நாங்கள், அந்த மக்கள் மேல் கைகளை வைக்கும்போது, ​​அவர்கள் குணமடைய வேண்டும் என்று நீங்கள் ஜெபியுங்கள். 187 இப்போது ஜெப வரிசையில் உள்ள நீங்கள். இப்போது என்னை விடுங்கள், என்னால் உங்களுக்குச் சொல்ல மட்டுமே முடியும். இப்போது, ​​அங்கே பின்னால், மற்றும் ஜெப வரிசையில் இருக்கப்போகும் அனைவரும். நீங்கள் வரும்போது, ​​இதைச் செய்யுங்கள், நீங்கள்-நீங்கள் என்னை நம்புவீர்கள் என்றால். பாருங்கள், நீங்கள் இந்த வரிசையின் வழியாக வரும்போது, ​​அந்த... நீங்கள் அந்த வரிசையில் நடக்கும்போது, ​​சிலுவையின் நிழலின் கீழ் நடப்பது போல நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்கிறீர்கள். இந்த மனிதர்கள் இயேசு எதைச் செய்யச் சொன்னாரோ அதைச் சரியாகச் செய்கிறார்கள். "வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்." உங்களுக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதற்காக, நான் ஆரம்பத்தில் சொன்னது போல, அவர்களுடன் சேர்ந்து என் வலையை விரித்து, நான் கீழே வருகிறேன். நீங்கள் விசுவாசிப்பீர்களா? 188 இப்போது நாம் முதலில் ஜெபிப்போம், ஏனென்றால் அது சொன்னது... உங்களுக்குத் தெரியும், பேதுரு தொர்காள் மரித்துக் கிடந்த அறையின் ஒரு பக்கத்தில் சென்று ஜெபித்தார், பின்னர் சென்று அவள் மேல் தன் கைகளை வைத்தார். அவர் ஜெபித்த பிறகு, அவர் எழுந்து சென்று அவள் மேல் கைகளை வைத்தார். ஆவியானவர் தன் மேல் வரும் வரை எலியா தரையில் முன்னும் பின்னுமாக நடந்தார், பின்னர் அவர் சென்று மரித்த குழந்தையின் மேல் தன் உடலை வைத்தார். அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது நாங்கள் ஜெபிக்கப் போகிறோம், பின்னர் நீங்கள் வரிசையின் வழியாக வரும்போது உங்கள் மேல் கைகளை வைப்போம். நீங்கள் இங்கே வந்து, அந்தக் கைகள் உங்களைத் தொட்டவுடன், எழுந்து உங்கள் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டு, தேவனைத் துதித்துக் கொண்டே செல்லுங்கள். நீங்கள் வரும்போது ஒரு விண்வெளி வீரராக இருங்கள், எல்லா அவிசுவாசத்திலிருந்தும் பறந்து செல்லுங்கள். 189 எங்கள் பரலோக பிதாவே, இது உச்சக்கட்டத்திற்கும் முக்கியமான தருணத்திற்கும் வருகிறது, நோயுற்ற மக்களுக்கு நடக்கக்கூடிய மிகப்பெரிய விஷயம் இப்போதுதான். இங்கே நூற்றுக்கணக்கான மக்கள், வாழ்க்கையின் எல்லாப் பிரிவுகளிலிருந்தும் நீர் அழைத்த ஊழியர்களின் ஜெப வரிசையின் வழியாகக் கடந்து செல்வார்கள், அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கும் தங்கள் அழைப்பிற்கும் கனம் செலுத்தித் தங்கள் வாழ்க்கையை உமக்குக் கொடுத்திருக்கிறார்கள். 190 இங்கே இந்தப் பெட்டியில் நோயாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செல்ல வேண்டிய கைக்குட்டைகள் இருக் கின்றன. கர்த்தராகிய இயேசுவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் அவற்றை அனுப்பும்போது அவர்கள் ஒவ்வொருவரும் குணமாகட்டும். 191 இந்த நோயுற்ற மக்கள் இந்த வரிசையின் வழியாக வரும்போது, ​​ஆண்டவரே, அவர்கள் ஒவ்வொருவரும் இப்போது விசுவாசத்தைப் பெறுவார்களாக. அவர்கள் தங்கள் மனதில் முடிவு செய்து, "நான் விளையாடிக்கொண்டிருந்தேன். இனி நான் விளையாடப் போவதில்லை. நான் நம்புவதாக இருந்தால், இப்போதே நம்பப் போகிறேன். தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தை வெளிப்படுத்தப்பட்டதை நான் பார்த்திருக் கிறேன். இந்த அறையில், இயேசு கிறிஸ்து எங்கேயோ இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். நிச்சயமாக அவர் தன்னை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் நபர் நம்மிடம் தவறாகச் சொல்ல மாட்டார், ஏனென்றால் நீர் சொன்னீர், 'ஆவிக்குரியவனோ அல்லது தீர்க்கதரிசியோ ஒருவன் இருந்து, அவன் சொல்வது நடந்தால், அவனுக்குச் செவிகொடுங்கள்.' 192 கர்த்தராகிய தேவனே, நீர் மரிக்க வில்லை, நீர் இங்கேயே இப்போது உயிருடன் இருக்கிறீர், உமது அபிஷேகம் உமது சபையின் மீதும் உமது மக்களின் மீதும் இருக்கிறது என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல முயற்சிக்கிறேன் என்பது மக்களின் மனதில் இருக்கட்டும். அவர்கள் கடந்து செல்லும்போது குணமடையட்டும். இந்த ஜெபத்தை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். 193 இப்போது, ​​சகோதரர் பார்டர்ஸ் அல்லது பாடலை நடத்தப் போகிறவர் யாராக இருந்தாலும் பாடும்போது, நாம் தொடர்ந்து ஜெபத்தில் இருப்போம். உங்கள் தலைகளைத் தாழ்த்தி வையுங்கள், நான் இப்போது இந்த மக்களுடன் ஜெபிப்பதற்காக இங்கே வரிசையில் நிற்க கீழே வருகிறேன். 194 [சகோதரர் பிரான்ஹாம் ஜெப வரிசையில் உள்ளவர்களுக்காக ஜெபிக்கும்போது, சகோதரர் பார்டர்ஸ் 'ஒன்லி பிலீவ்' (Only Believe - விசுவாசிக்க மட்டுமே) பாடலைப் பாடுகிறார். ஒலிநாடாவில் காலியிடம்] ...ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன், ஓ, எல்லாம் கூடும், ஓ ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்; ஓ ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன், நாம் அதைப் பாடும்போது உங்கள் கைகளை உயர்த்துவோம். ஓ ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன், எல்லாம் கூடும், ஓ ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன். 195 உங்களுக்குத் தெரியும், என் வாழ்க்கையில் நான் எப்போதாவது ஒரு ஜெப வரிசையின் வழியாகச் சென்றிருக்கிறேன் என்று நான் நம்பவில்லை, அந்த வரிசையில் நான் கண்ட விசுவாசத்தை விட அதிகமான விசுவாசத்தை நான் எப்போதாவது கண்டிருக்கிறேன் என்று. உண்மையிலேயே அமெரிக்காவில் நான் நடத்திய மிகச்சிறந்த ஜெப வரிசைகளில் இதுவும் ஒன்று என்று நான் நம்புகிறேன், அப்படி ஒரு வரிசை செல்வதைப் பார்ப்பதற்கு. என் பெயர் வில்லியம் பிரான்ஹாம் என்பது எவ்வளவு உறுதியோ, நான் இந்த மேடையில் நின்று கொண்டிருக்கிறேன் என்பதும் அவ்வளவு உறுதி, போதகர்களே, வரிசையின் வழியாகச் சென்ற உங்கள் மக்களைப் பற்றி நீங்கள் கேள்விப்படுவீர்கள். இது உண்மையிலேயே ஒரு மகத்தான விசுவாசமாக இருந்தது, என் வாழ்க்கையில் நான் அறிந்தவற்றில் சில சிறந்தவை, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் எனக்குச் சாட்சி சொல்ல உள்ள ஒரே வழியின்படி. அது உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. நன்றி, மக்களே. 196 இப்போது நீங்கள் குணமடைந்தீர்கள் என்று விசுவாசிக்கிற அனைவரும், "ஆமென்," என்று சொல்லுங்கள். [சபையார், "ஆமென்." என்கிறார்கள்] அங்கே, அதைக் கேளுங்கள்! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 197 நான் உங்களை மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடு இருப்பாராக. கர்த்தருக்குச் சித்தமானால், நான் அடுத்த வாரம் இங்கே மேலே துலாரேவில் (Tulare) இருப்பேன். அந்த இடத்தின் பெயர் அதுதானா? துலாரே, இங்கே மேலே துலாரே, அடுத்த வாரம். 198 இப்போது வழக்கமான முறைப்படி நாம் விடுவிக்கப்படும்போது, ஒரு கணம் நாம் அனைவரும் எழுந்து நிற்போம். பின்னர் அவர்கள் இங்கே ஜெபத் துணிகள் மற்றும் பிறவற்றைக் கொடுக்கப் போகிறார்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 199 மேலும் ஊழியம் செய்யும் சகோதரர்களாகிய உங்களையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. அதுதான் அதை மிகவும் உண்மையானதாக்குகிறது, நீங்கள் சகோதரர்கள், பால் கெயின் மற்றும் இந்தப் போதகர்கள் அனைவரும், எல்லோரும் இங்கே நின்று கொண்டிருந்தீர்கள், விசுவாசத்தில் ஒரு பெரிய ஆதரவு. 200 நான் இந்தக் கூட்டத்தை மிகவும், அளவில்லாமல் மகிழ்ந்தேன். அமெரிக்காவில் நான் நடத்திய சிவப்பு விளக்குக் கூட்டங்களில் (red-light meetings - எச்சரிக்கையின்/ முக்கியமான கூட்டங்களில்) ஒன்றாக இதை நான் கருதுகிறேன். இதைவிடப் பெரிய கூட்டங்களை நான் நடத்தியிருக்கிறேன். 201 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி. [சகோதரி அப்ஷா, "நான் உங்களுடன் கைகுலுக்க விரும்பினேன். ஓ, அல்லேலூயா!" என்கிறார்] தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி அப்ஷா. உங்களையும் சகோதரர் பில்லையும் (Brother Bill) நான் நினைக்காத ஒரு வாரம் கூடச் செல்வதில்லை. அந்தக்கரையில் நான் உங்களைச் சந்திப்பேன், சகோதரி, அங்கே பழைய காரியங்கள் எல்லாம் ஒழிந்துபோம். அந்த நாளில் நாம் அங்கே இருப்போம். ஆமென். 202 இப்போது இங்கிருக்கும் போதகர் ஒருவரை வந்து, அதிகாரப்பூர்வமாக ஜெபத்தில் நம்மை விடுவிக்கும்படி நாம் கேட்கும்போது, நம் தலைகளைத் தாழ்த்துவோம். நாம் தலைவணங்குவோம். சகோதரரே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இறங்கு வரிசையில் எண்ணுதல் (64-0209) 127